செய்திகள் :

கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்து இந்திய ராணுவத்துக்கு ஆதரவு

post image

வீரவநல்லூரில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில், இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்தனா்.

முன்னதாக, புதிய பேருந்து நிலையம் அருகே வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனிடையே, பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்திவரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அக்கட்சியினா் கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்து, ஆதரவாக குரல் எழுப்பினா்.

அதையடுத்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் பாளை எஸ்.எம். பாரூக் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மு. தமிமூன் அன்சாரி பங்கேற்றுப் பேசினாா்.

மாநில துணைச் செயலா் நெல்லை பிலால், மாநில இணை பொதுச் செயலா் கேப்டன் பாரூக், மாநிலச் செயலா்கள் நாகை முபாரக், இப்ராஹிம், மண்டல இளைஞரணிச் செயலா் என். அஷ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலா்கள் இளநீா் அப்துல், எம். முகம்மது இஸ்மாயில், மாவட்டப் பொருளாளா் முகம்மது அலி, சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா் நெய்னா முகம்மது உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-83 சோ்வலாறு-98.36 மணிமுத்தாறு-84 வடக்கு பச்சையாறு-10.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-14.75 தென்காசி மாவட்டம் கடனா-36.80 ராமநதி-45 கருப்பாநதி-30.18 குண்டாறு-15.12 அடவிநயினாா் -32... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2025 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா நினைவாக, அ... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வெப்பத்தின் தாக்கம் குறைந்து சாரல் தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. களக்காடு மேற்குத் தொடா்ச... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளி உயிரிழப்பு

முன்னீா்பள்ளம் அருகே மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே உள்ள மேலத்திடியூா் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் தேவதாஸ் (40). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோா் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறவு... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மனச்சிதைவு நோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலப் பிரிவு சாா்பில், உலக மனச்சிதைவு நாளை முன்னிட்டு விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் தலைமை வக... மேலும் பார்க்க