செய்திகள் :

கோவை செம்மொழி பூங்கா விதிமீறல் புகார் - டென்ஷன் ஆன நேரு, செந்தில் பாலாஜி

post image

கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.212 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. 1,000  பேர் அமரக்கூடிய அரங்கம், நூற்றுக்கணக்கான தாவர வகைகள், செயற்கை நீர் வீழ்ச்சியுடன் மலைக் குன்று, வன விலங்குகள் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

கோவை செம்மொழி பூங்கா

இந்த பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற நவம்பர் 25-ம் தேதி திறந்துவைக்கிறார். பெரும்பாலான பணிகள் முடிவடையாத நிலையில், தேர்தல் காரணமாக அவசர அவசரமாக பூங்கா திறக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதற்காக மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள், ஊழியர்களையும் செம்மொழி பூங்கா பணிகளுக்கு முடுக்கிவிட்டுள்ளதாகவும்,  விதிமீறல் நடந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள். இந்நிலையில் செம்மொழி பூங்கா பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நேரு செந்தில் பாலாஜி ஆய்வு

அப்போது செய்தியாளர்கள் அந்தப் புகாரை பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு நேரு மற்றும் செந்தில் பாலாஜி பதில் அளிக்க முடியாமல் தடுமாறினார்கள்.

“பசுமை பரப்பளவு குறைவாக உள்ளதோ?”, “டெண்டர் விதிமீறல் நடந்துள்ளதாக கூறுகிறார்களே?”, “அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்களே?” என்று அடுத்தடுத்து கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இதில் கடுப்பான நேரு, “வேலை மெதுவாக இருந்தால் மந்தம் என்கிறீர்கள், அவசரமாக செய்தால் முறைகேடு என்கிறீர்கள்.

கோவை செம்மொழி பூங்கா

ஏங்க சும்மா எங்களையே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.” என்றார். செந்தில் பாலாஜி, “கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் கேட்கக் கூடாது.”  என்று டென்ஷன் ஆகி செய்தியாளர் சந்திப்பை முடித்து சென்றனர்.

TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்!

கரூர் சம்பவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் மக்களை சந்தித்திருக்கிறார் விஜய். காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியின் உள்ளரங்கில் நடந்த கூட்டத்தில் அரைமணி நேரம் மக்கள் முன்பு பேசி... மேலும் பார்க்க

Nigeria: நைஜிரியாவில் ஒரே பள்ளியில் 315 பேர் கடத்தல்! - பெரும் அச்சத்தில் மக்கள்

நைஜிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், குழந்தைகள் உட்பட மொத்தமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜிரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய க... மேலும் பார்க்க

"நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல்" - திமுக வை தாக்கும் தவெக விஜய்

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் மக்கள் சந்திப்பு என்பதால், பலத்த பாதுகாப்புடன் சுங்... மேலும் பார்க்க

மதுரை: சீரமைக்கப்படாத மலைச்சாலை; கண்டுகொள்ளாத அரசு; 40 ஆண்டுகளாக அவதிப்படும் மக்கள்; பின்னணி என்ன?

மதுரை - தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் - மயிலாடும்பாறை சாலையைச் சீரமைத்து, பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க ... மேலும் பார்க்க

”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அப்பாவு

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. அப்போது பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வ... மேலும் பார்க்க

Sanitary Workers : கொளத்தூரில் முதல்வரை எதிர்த்து தூய்மைப் பணியாளரை போட்டியிட செய்வோம்! - கு.பாரதி

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் அம்பத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை... மேலும் பார்க்க