செய்திகள் :

கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

post image

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவருக்கு அலாவுதீன் என்ற கணவர் இருந்தார். டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ம் ஆண்டு மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக சுமையா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அலாவுதீன்

இதனிடையே அவருக்கு, ஹக்கீம் என்கிற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அலாவுதீனின் சகோதரர் ஆரிஃப், அவரின் நண்பர் கௌதம் ஹக்கீமை திட்டி கத்தியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஹக்கீம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆரிஃப் மற்றும் கௌதமை கைது செய்தனர்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. மேட்டுப்பாளையம் காவல்துறையினர் நம்மிடம் கூறுகையில், “காரமடை நகராட்சியில் ரவிக்குமார் என்கிற திமுக கவுன்சிலர் உள்ளார். ரவிக்குமாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கவுன்சிலர் ராம்குமார்

இளைய மகன் சரண்குமாருக்கு திருமணமாகி பூஜா என்ற மனைவி உள்ளார். ரவிக்குமாருக்கு சொந்தமாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஒரு டீ கடை இருந்துள்ளது. அங்கு வைத்து அலாவுதீனுக்கும், பூஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடைசியாக ரவிக்குமாரின் வீட்டுக்கு சென்ற பிறகு தான் அலாவுதீன் மாயமாகியுள்ளார் என ஆரிஃப் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரவிக்குமார், அவரின் மூத்த மகன் மணிகண்டன், சரண்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். அதில் அலாவுதீன் – பூஜா இடையே திருமணம் தாண்டிய உறவு இருந்ததால், கடந்த 2024 ஏப்ரல் மாதம் அலாவுதீனை அழைத்து 3 பேரும் இணைந்து கொலை செய்துள்ளனர்.

மணிகண்டன்
சரண்குமார்

பிறகு மாதேஸ்வரன் மலைப் பகுதியில் அவரின் உடலை எரித்து தடயத்தை அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று எலும்பு துண்டுகளை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி ரவிக்குமார், சரண், மணிகண்டன் ஆகியோரை கைது செய்துள்ளோம்.” என்றனர்.

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க