செய்திகள் :

கோவை: ரூ.8 ஆயிரம் இல்லத்தரசி மாதிரி கூப்பன் விநியோகம் – அதிமுகவினர் முற்றுகை; பறக்கும் படை விசாரணை

post image

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன்கள் வழங்கப்படும் என்பது தி.மு.க.வின் முக்கியமான வாக்குறுதியாக உள்ளது. இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் 7 வது வீதியில் உள்ள ஒரு தனியார் கணினி மையத்தில் வாக்காளர்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் இல்லத்தரசி மாதிரி கூப்பன்களை தி.மு.க.வினர் நேற்று மாலை வழங்கியதாகவும், அதில் ரூ.8 ஆயிரம் கூப்பனுக்கு எந்த பொருள் வாங்குவீர்கள் என்ற தகவலும் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் அந்த கணினி மையத்தை முற்றுகையிட்டனர். கணினி மையத்திற்குள் புகுந்த அவர்கள், அங்கு இருந்தவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாதிரி கூப்பன் வழங்கிய கணினி மையம்
மாதிரி கூப்பன் வழங்கிய கணினி மையம்

அப்போது வாக்காளர்களை ஏமாற்றும் வகையில் மாதிரி கூப்பன்களை வழங்கி வாக்குகளை சேகரிக்க தி.மு.க.வினர் முயல்வதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். பின்னர் இது குறித்து தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அங்கு இருந்த வாக்காளர் பட்டியல், விண்ணப்பங்கள் மற்றும் கூப்பன்களைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து தேர்தல் அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கூப்பன்களை வழங்கியவர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

"யாரும் ஈரானுக்கு சுங்க வரி கட்டக்கூடாது" - ஹார்முஸைச் சுற்றி வளைக்கும் ட்ரம்ப்; எச்சரிக்கும் ஈரான்

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை கைக்கூடவில்லை. 'பேச்சுவார்த்தையின் முதல் கூட்டம் எப்போதும் வெற்றிப் பெறாது' என்று பேச்சுவார்த்தை குறித்து ஈரான் பாசிட்டிவாகவே தெரிவித்த... மேலும் பார்க்க

மேடையில் மயங்கி விழுந்த ராமதாஸ்; "அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் சும்மா விடமாட்டேன்"- அன்புமணி ஆவேசம்

தேர்தல் பரப்புரைக்காக சேலம் வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மயங்கி விழுந்த சம்பவம், அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.டாக்டர் ராமதாஸ்பாமக-வில் ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து... மேலும் பார்க்க

"மீன்பிடி தடைக்காலப் பாதுகாப்பு நிதி ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்" - குமரியில் விஜய் வாக்குறுதி

கன்னியாகுமரியில் த.வெ.க தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். மகாதானபுரம் சந்திப்பில் சைக்கிளில் வலம் வந்து தொண்டர்களைச் சந்தித்தார். பின்னர் கன்னியாகுமரி சீரோ பாயிண்ட். வரை ரோடு ஷோ நிகழ்த்தினார். மகாதா... மேலும் பார்க்க