செய்திகள் :

சக மாணவிகள், பேராசிரியரின் ராகிங், பாலியல் தொல்லை: கல்லூரி மாணவி உயிரிழப்பு, காட்டிக்கொடுத்த மொபைல்!

post image

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 29 வயது மாணவி, மன அழுத்தம் காரணமாக லூதியானா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். அவர் இறந்த பிறகுதான் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. இது குறித்து இறந்துபோன மாணவியின் தந்தை போலீஸில் அளித்துள்ள புகாரில், ''என் மகள் மிகவும் மன அழுத்தம் காரணமாகத்தான் இறந்து போனார். இதற்கு அவள் படித்த கல்லூரி பேராசிரியர் அசோக்குமார்தான் காரணமாகும். பேராசிரியர் அசோக்குமார் என் மகளுக்கு மனரீதியாக, உடல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வந்தார். அதோடு வகுப்பறையில் தொடக் கூடாத இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டார்.

இதனால் என் மகளின் மன நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் அவர் டிசம்பர் 26ம் தேதி லூதியானா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். எங்கள் மகள் இறந்த அதிர்ச்சியில் இது குறித்து இதுநாள் வரை எதுவும் தெரிவிக்காமல் இருந்தோம். எங்கள் மகள் இறக்கும் முன்பு மொபைல் போனில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். அதில்தான் வகுப்பிலும், கல்லூரி வளாகத்திலும் பேராசிரியர் அநாகரிகமாக தொட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு தெரிவித்த மகளை பேராசிரியர் மிரட்டி இருக்கிறார். டிசம்பர் 20ம் தேதி நான் ஆன்லைன் மூலம் போலீஸ் மற்றும் முதல்வருக்கு புகார் செய்தேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. மாணவிகள் சிலர் ராகிங் செய்து அடித்து உதைத்து அவமானப்படுத்தியுள்ளனர். அதோடு இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக செப்டம்பர் 18ம் தேதி போலீஸில் புகார் செய்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

மாணவியின் தந்தை டிசம்பர் 20ம் தேதி கொடுத்த புகாரை தொடர்ந்து போலீஸார் ராகிங் கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி அசோக் ரத்தன் கூறுகையில், ``20ம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். இப்போது பேராசிரியர் சம்பந்தப்பட்டு இருப்பதால் அது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மாணவி இறப்பதற்கு முன்பு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட அனைத்து மருத்துவமனையிலும் விசாரணை நடத்தப்படும்'' என்றார்.

சித்தப்பாவுடன் தொடர்பு... கணவனைக் கொலைசெய்த மனைவி கைது - கோவையில் `பகீர்!'

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவா என்கிற ரதீஷ் (27). ரதீஷ் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் இந்திராணி (26) என்கிற பெண்ணுக்கும் சமூகவலைதளத்... மேலும் பார்க்க

பகலில் ஓட்டுநர்.. இரவில் திருடன்.. வீட்டின் பூட்டை உடைக்காமலேயே கொள்ளை - சிக்கிய கோவை திருடன்!

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஐயப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபா மார்டின். இவர் கடந்த வாரம் ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தையே ஏமாற்றிய கும்பல்: கொலை, கொள்ளை, பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் - தரகர்கள் கைது!

உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில், தொழில்முறை `ஜாமீன் தரகர்களாக'ச் செயல்பட்ட ஒரு கும்பலை காவல்துறை கடந்த புதன்கிழமை கைதுசெய்திருக்கிறது. கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை போன்ற கொடூரமான குற்றங்கள... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: "உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு உதவினேனா?" - CPM முன்னாள் அமைச்சர் விளக்கம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலவர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.இந்த வழ... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: காணிக்கை பணத்தில் கைவைத்த கோயில் ஊழியர் - சிக்கவைத்த சிசிடிவி!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் உள்ள பல்வேறு சன்னிதிகள் முன் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கைய... மேலும் பார்க்க

லிஃப்ட் கொடுப்பதாக காருக்குள் அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை; இளம்பெண்ணை சாலையில் வீசிய கும்பல்!

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் இரவு நேரத்தில் 28 வயது பெண் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கார் அப்பெண் அருகில் வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் அப்பெண்ணிடம் எங்கு செல்ல வே... மேலும் பார்க்க