செய்திகள் :

சக மாணவிகள், பேராசிரியரின் ராகிங், பாலியல் தொல்லை: கல்லூரி மாணவி உயிரிழப்பு, காட்டிக்கொடுத்த மொபைல்!

post image

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 29 வயது மாணவி, மன அழுத்தம் காரணமாக லூதியானா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். அவர் இறந்த பிறகுதான் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. இது குறித்து இறந்துபோன மாணவியின் தந்தை போலீஸில் அளித்துள்ள புகாரில், ''என் மகள் மிகவும் மன அழுத்தம் காரணமாகத்தான் இறந்து போனார். இதற்கு அவள் படித்த கல்லூரி பேராசிரியர் அசோக்குமார்தான் காரணமாகும். பேராசிரியர் அசோக்குமார் என் மகளுக்கு மனரீதியாக, உடல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வந்தார். அதோடு வகுப்பறையில் தொடக் கூடாத இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டார்.

இதனால் என் மகளின் மன நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் அவர் டிசம்பர் 26ம் தேதி லூதியானா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். எங்கள் மகள் இறந்த அதிர்ச்சியில் இது குறித்து இதுநாள் வரை எதுவும் தெரிவிக்காமல் இருந்தோம். எங்கள் மகள் இறக்கும் முன்பு மொபைல் போனில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். அதில்தான் வகுப்பிலும், கல்லூரி வளாகத்திலும் பேராசிரியர் அநாகரிகமாக தொட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு தெரிவித்த மகளை பேராசிரியர் மிரட்டி இருக்கிறார். டிசம்பர் 20ம் தேதி நான் ஆன்லைன் மூலம் போலீஸ் மற்றும் முதல்வருக்கு புகார் செய்தேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. மாணவிகள் சிலர் ராகிங் செய்து அடித்து உதைத்து அவமானப்படுத்தியுள்ளனர். அதோடு இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக செப்டம்பர் 18ம் தேதி போலீஸில் புகார் செய்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

மாணவியின் தந்தை டிசம்பர் 20ம் தேதி கொடுத்த புகாரை தொடர்ந்து போலீஸார் ராகிங் கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி அசோக் ரத்தன் கூறுகையில், ``20ம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். இப்போது பேராசிரியர் சம்பந்தப்பட்டு இருப்பதால் அது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மாணவி இறப்பதற்கு முன்பு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட அனைத்து மருத்துவமனையிலும் விசாரணை நடத்தப்படும்'' என்றார்.

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னா... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாள... மேலும் பார்க்க

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந... மேலும் பார்க்க

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க