செய்திகள் :

வங்கதேசத்தவரைக் கண்டுபிடிக்க மொபைல் போனில் ஸ்கேன்? - சர்ச்சையாகும் உத்தரப்பிரதேச போலீஸாரின் வீடியோ

post image

இந்தியாவில் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது செய்து நாடுகடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் போலீஸார் பொதுமக்கள் பங்களாதேஷ் பிரஜைகள் இருக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிக்க மொபைல் போன் கொண்டு ஸ்கேன் செய்யும் வீடியோ வைரலாகி இருக்கிறது.

மக்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் போலீஸார் பொதுமக்களின் பின்புறம் மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்கின்றனர்.

உத்தரப்பிரதேச போலீஸாரின் இச்செயல் சர்ச்சையாகி இருக்கிறது. வைரலாகி இருக்கும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், உண்மையிலேயே அப்படி ஒரு சோதனை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஸ்கேன் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் பங்களாதேஷ் பிரஜையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்று போலீஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச போலீஸார்
உத்தரப்பிரதேச போலீஸார்

இது குறித்து மொபைல் போன் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபரின் உறவினர் ரோஷ்னி கூறுகையில், ''உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் எங்களது பகுதிக்கு வந்தனர். அவர்கள் எங்களிடம் ஆவணங்களைக் காட்டும்படி கேட்டனர். நாங்களும் காட்டினோம்.

அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், நாங்கள் ஒரு மெஷின் கொண்டு வந்திருக்கிறோம். அது பங்களாதேஷ் பிரஜையை அடையாளம் காட்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் மெஷின் எதுவும் இல்லை.

அவர்கள் தங்களிடம் இருந்த மொபைல் போனை எனது மைத்துனரின் பின்னால் வைத்தனர். மற்றபடி மிரட்டவில்லை. நாங்கள் இங்கு 1986ம் ஆண்டில் இருந்து வசிக்கிறோம். எங்களது சொந்த ஊர் பீகார் ஆகும்" என்றார்.

ரோஷ்னியின் அத்தை ரபிலா இது குறித்து கூறுகையில், ''போலீஸார் அனைவரிடமும் வந்து ஸ்கேன் செய்து கொள்ள சொன்னார்கள். ஒரு நபரின் முதுகில் ஸ்கேன் செய்தால், அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பது உடனடியாகத் தெரிந்துவிடும் என்று தெரிவித்தார்கள்.

எங்களது ஆவணங்களைப் பார்த்தவுடன் சென்றுவிட்டார்கள். சமீப நாட்களில் இந்தப் பகுதியில் இதுபோன்று இரண்டு சரிபார்ப்புப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த இரண்டு முறைகளிலும், காவல்துறையினர் குடியிருப்பாளர்களிடம் ஆவணங்களைக் கேட்டுப் பெற்று, சோதனைகளை முடித்த பிறகு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ஆனால் ஸ்கேன் செய்ததில் ஒருவரை அவர் பங்களாதேஷ் பிரஜை என்று காட்டியது. ஆனால் அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது பின்னர் தெரிய வந்துள்ளது" என்றார்.

மத்தியபிரதேசம்: "5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்"- குடிநீரில் கலந்த கழிவுநீர்; 9 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாக்கடை நீர் கலந்த குடிநீரைக் குடித்து 7 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளன... மேலும் பார்க்க

டெலிவரி ஊழியர்கள்: "சுகாதாரக் காப்பீடு டு ஓய்வூதியம் வரை" - சமூகப் பாதுகாப்புச் சட்ட வரைவு வெளியீடு

Zomato (சோமேட்டோ), Swiggy (ஸ்விக்கி) உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள், குறைவான ஊதியம், அதிக வேலைப்பளு, பாதுகாப்பு இல்லாமை மற்றும் மரியாதையின்மை போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக டிசம்பர் 31, 2025... மேலும் பார்க்க

இந்தியாவின் பணக்கார மாநகராட்சி; மும்பையை ஆளப்போவது யார்? - 2516 வேட்பாளர்களுடன் பலமுனை போட்டி!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மற்றொரு சிவசேனா(உத... மேலும் பார்க்க

கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன?

இன்று - 2026-ம் ஆண்டின் முதல் நாளில் இருந்து சில நடைமுறைகள் மாறுகின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். 1. பான் - ஆதார் இணைப்பு நேற்று பான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி. இன்னமும், இந்த இரண்டையும் ... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திய இந்தியா? "அடுத்த டார்கெட் ஜெர்மனி" - மத்திய அரசு சொல்வது என்ன?

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் டாப் நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா அந்த இடத்தைப் பிடித்துள்ளது.அடுத்த சில ஆண்டுகளில், மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியையும் இந... மேலும் பார்க்க

இரண்டே நாள்கள்தான் டைம்; ஆதார்-பான் இணைந்திருக்கிறதா? வெறும் 4 ஸ்டெப்களில் தெரிந்துகொள்ளலாம்|How to?

இன்னும் இரண்டு நாள்கள்தான் உள்ளன. அதற்குள் (டிசம்பர் 31) பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும். இல்லையெனில், பான் செல்லாமல் போய்விடும். பான் செல்லாமல் சென்றுவிட்டால் வருமான வரி தாக்கல் முதல் வருமான வரி ... மேலும் பார்க்க