செய்திகள் :

"நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைப்பேன்" - உமர் காலித்திற்கு நியூயார்க் மேயரின் குறிப்பு

post image

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்னும் சிறையில் இருந்து வருகிறார் மாணவச் செயற்பாட்டாளர் உமர் காலித்.

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரிய போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது அரசு.

அவருக்குத் தற்போதைய நியூயார்க் மேயரான ஜோஹ்ரான் மம்தானி எழுதிய குறிப்பை உமர் காலித்தின் இணையர் பனோஜ்யோத்ஸ்னா லஹிரி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, உமர் காலித்திற்கு எழுதிய குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...
ஜோஹ்ரான் மம்தானி, உமர் காலித்திற்கு எழுதிய குறிப்பு
ஜோஹ்ரான் மம்தானி, உமர் காலித்திற்கு எழுதிய குறிப்பு

"அன்புள்ள உமர்,

கசப்புணர்வு ஒரு மனிதனை அழித்துவிடாமல் தடுப்பது முக்கியம் என்று நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன்.

உங்களுடைய பெற்றோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

நாங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று எழுதியுள்ளார்.

கடந்த நவம்பர் 4-ம் தேதி நியூயார்க் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானி, நேற்று பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், பனோஜ்யோத்ஸ்னா லஹிரி பகிர்ந்துள்ள உமர் காலித் குறித்த ஜோஹ்ரான் மம்தானியின் குறிப்பு வைரலாகி வருகிறது.

"இலவசம்னு சொல்லிட்டு கட்டணம் வசூலிக்கிறாங்க" - விக்டோரியா அரங்க விவகாரமும் மாநகராட்சியின் விளக்கமும்

சென்னையின் தொன்மையான கட்டிடக்கலைக்குச் சான்றாக நிற்கும் விக்டோரியா அரங்கத்தைக் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விக்டோரியா அரங்கத்தைப் பார்வையிட பொதுமக்கள் கட்டணமின்றி அன... மேலும் பார்க்க

புதுச்சேரி: அதிர வைக்கும் போலிமருந்து மோசடி; மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சிக்குவார்களா?

இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா' மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்' பெயரில், இந்தியா முழுவதும் போலி மருந்துகளை சப்ளைச் செய்த கும்பலை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.அந்தப் போலி மருந்த... மேலும் பார்க்க

”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிப்பு புகார்” - அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்ட சாலை பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். சிங்கப்பூர் தொழிலதிபரான இவர் அங்கேயே வசித்து வந்தார். இவருக்கு தஞ்சாவூர் பால்பண்ணை, சீராஜ்பூர் நகர் மற்றும் செங்கிப்பட்டி ... மேலும் பார்க்க

`வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி; ரூ.2.2 லட்சம் கோடி மாயமானது எங்கே?'- திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி!

`திமுக அரசு வாங்கிய கடனில், ரூ.2.2 லட்சம் கோடி யாருக்கும் பயனில்லாமல் மாயமானது எங்கே?' என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,`... மேலும் பார்க்க