செய்திகள் :

புதுச்சேரி: அதிர வைக்கும் போலிமருந்து மோசடி; மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சிக்குவார்களா?

post image

இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா' மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்' பெயரில், இந்தியா முழுவதும் போலி மருந்துகளை சப்ளைச் செய்த கும்பலை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.

அந்தப் போலி மருந்து தொழிற்சாலைகளுக்கும் அவற்றின் குடோன்களுக்கும் சீல் வைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், முக்கிய குற்றவாளியான சிவகங்கையைச் சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் உள்ளிட்ட 26 பேரைக் கைது செய்தனர்.

அதையடுத்து இந்த மோசடிக் கும்பலுடன் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அரசு அதிகாரிகள் என அனைவரும் தொடர்பில் இருந்ததால், 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT - Special Investigation Team) அமைத்து உத்தரவிட்டார் ஆளுநர் கைலாஷ்நாதன்.

போலி மருந்து தொழிற்சாலை
போலி மருந்து தொழிற்சாலை

அதையடுத்து போலி மருந்துக்கும்பலுக்கு ஜி.எஸ்.டி மோசடியில் உடந்தையாக இருந்த முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

அதேசமயம், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு அளித்தன. ஆனால், `புதுச்சேரி காவல்துறையின் எஸ்.ஐ.டியே விசாரிக்கட்டும்' என்று உறுதியாக அவற்றை நிராகரித்த கவர்னர், அதன்பிறகு வழக்கை சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றினார்.

இதற்கிடையில் போலியாகத் தயாரிக்கப்பட்ட 34 மருந்து நிறுவனங்களின் மருந்துகளை விற்பதற்குத் தடை விதித்து, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மருந்தகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

இந்த நிலையில்தான் மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று, ஒருசில மருத்துவர்கள் சி.பி.ஐ-க்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்திரா காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், ``மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் போலி மருந்து உற்பத்தி நடைபெற்றிருக்க வாய்ப்புகளே இல்லை.

சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை, சில ஆண்டுகளுக்கு முன்பு தனித் துறையாக மாறிவிட்டது. அப்போதில் இருந்தே அங்கு எதுவும் சரியாக நடப்பதில்லை.

சிபிஐ
சிபிஐ

மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் தரமானதா, போலியாக மருந்துகள் விற்கப்படுகிறதா, காலாவதியான மருந்துகள் இருக்கிறதா என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள்தான் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால் அவர்கள் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை. அதனால் அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள், வாங்கிய சொத்துகளின் விவரங்களைக் கணக்கிட வேண்டும்.

அத்துடன் போலி மருந்து மோசடியில் முக்கிய குற்றவாளிகள், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் செல்போனில் பேசிய விவரங்களையும் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும்" என்றனர்.

"இலவசம்னு சொல்லிட்டு கட்டணம் வசூலிக்கிறாங்க" - விக்டோரியா அரங்க விவகாரமும் மாநகராட்சியின் விளக்கமும்

சென்னையின் தொன்மையான கட்டிடக்கலைக்குச் சான்றாக நிற்கும் விக்டோரியா அரங்கத்தைக் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விக்டோரியா அரங்கத்தைப் பார்வையிட பொதுமக்கள் கட்டணமின்றி அன... மேலும் பார்க்க

"நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைப்பேன்" - உமர் காலித்திற்கு நியூயார்க் மேயரின் குறிப்பு

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்னும் சிறையில் இருந்து வருகிறார் மாணவச் செயற்பாட்டாளர் உமர் காலித்.டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரிய போராட்டம் நடந்... மேலும் பார்க்க

”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிப்பு புகார்” - அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்ட சாலை பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். சிங்கப்பூர் தொழிலதிபரான இவர் அங்கேயே வசித்து வந்தார். இவருக்கு தஞ்சாவூர் பால்பண்ணை, சீராஜ்பூர் நகர் மற்றும் செங்கிப்பட்டி ... மேலும் பார்க்க

`வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி; ரூ.2.2 லட்சம் கோடி மாயமானது எங்கே?'- திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி!

`திமுக அரசு வாங்கிய கடனில், ரூ.2.2 லட்சம் கோடி யாருக்கும் பயனில்லாமல் மாயமானது எங்கே?' என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,`... மேலும் பார்க்க