செய்திகள் :

பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திய இந்தியா? "அடுத்த டார்கெட் ஜெர்மனி" - மத்திய அரசு சொல்வது என்ன?

post image

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் டாப் நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா அந்த இடத்தைப் பிடித்துள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில், மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியையும் இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

2025-ம் ஆண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து '2025: A Defining Year for India’s Growth' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்திய அரசு.

மொத்த உள்நாட்டு உற்பத்தி | GDP
மொத்த உள்நாட்டு உற்பத்தி | GDP

அதில் கூறப்பட்டுள்ளதாவது...

> தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.18 டிரில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பட்டியலில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

> 2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 பில்லியனாக உயர்ந்து, மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளும்.

> 2024-25 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 7.4 சதவிகிதமாகவும், 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவிகிதமாகவும் இருந்தது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி. அது 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 8.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

உலகளவில் நிலையற்ற தன்மை இருந்தாலும், இந்தியா தொடர்ந்து வளர்ந்து வருவது இதன் மூலம் தெரிகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி | GDP
மொத்த உள்நாட்டு உற்பத்தி | GDP

> இந்தியாவில் பணவீக்கமும் அதிகளவில் உயரவில்லை. இந்த ஆண்டின் மத்தியில் அது நன்றாகக் குறைந்தது.

> 2025-26 நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. அதை இப்போது திருத்தி 7.3 சதவிகிதமாக மாற்றியுள்ளது.

> இந்தியாவில் இந்த ஆண்டு வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது.

> உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளும் இந்தியாவின் வளர்ச்சியை மிக பாசிட்டிவாக கூறியுள்ளன.

இரண்டே நாள்கள்தான் டைம்; ஆதார்-பான் இணைந்திருக்கிறதா? வெறும் 4 ஸ்டெப்களில் தெரிந்துகொள்ளலாம்|How to?

இன்னும் இரண்டு நாள்கள்தான் உள்ளன. அதற்குள் (டிசம்பர் 31) பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும். இல்லையெனில், பான் செல்லாமல் போய்விடும். பான் செல்லாமல் சென்றுவிட்டால் வருமான வரி தாக்கல் முதல் வருமான வரி ... மேலும் பார்க்க

ரயில்களின் நேரம் மாற்றம்: எந்த ரயில், எப்போது புறப்படும்? நேர அட்டவணை; முழு விவரம்!

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப... மேலும் பார்க்க

தேனியில் மலை போல் சேரும் குப்பைகள்! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

தேனி, அல்லிநகரம் அருகே உள்ள சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகளின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கமாகவே மாறி உள்ளது.அல்லிநகரத்திற்கு அருகில் பாரஸ்ட் ரோட் பகுதியில் ஒரு சிறிய குன்று உள்ளது, அ... மேலும் பார்க்க

SIR: உங்கள் பெயர் நீக்கப்பட்டு விட்டதா? புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க எளிய வழி!

தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் முதல் கட்டம் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது.இதில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர் ந... மேலும் பார்க்க

'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'!

உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஐந்து நாள்கள் தான் மீதம் உள்ளன. ஆம்... பான் - ஆதார் இணைப்பிற்கு வரும் டிசம்பர் 31-ம் தேதியே கடைசி. இதை தவறவிட்டு விட்டால், வரும் ஜனவரி 1-ம் தேதியில் இர... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க

இந்நேரத்திற்கு வருமான வரி ரீஃபண்ட் வந்திருக்க வேண்டும். ஆனால் பல லட்ச மக்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லை. ஏன்... என்ன காரணம்? இந்த ஆண்டு வருமான வரி ரீஃபண்ட் தாமதமாவதற்கு இரண்டு காரணங... மேலும் பார்க்க