செய்திகள் :

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: சென்னையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை; சாட்சியாக மாற்ற முடிவா?

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலை கோயில் கருவறையின் முன்பகுதியில் இரு புறமும் உள்ள துவார பாலகர்கள் சிற்பம், திருநடை, கொடி மரம் உள்ளிட்டவைகளில் இருந்து தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

துவார பாலகர்கள் சிற்பத்தின் மீது பொதியப்பட்ட கவசங்கள் மற்றும் கருவறை திருநடை ஆகியவற்றில் செம்பு பொதியப்பட்டு அதன்மீது தங்கம் பூசப்பட்டுள்ளது. தங்கம் பூசும் பணி சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் நிறுவனத்தில் வைத்து நடந்துள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

தங்கம் பூசப்பட்ட கோயில் திருநடை போன்றவை பல வி.ஐ.பிக்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் நடத்தி அதற்காக பணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்தும் கோயில் திருநடைகள் பூஜை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து அவரிடம் சிறப்பு விசாரணைக்குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் ஏற்பட்ட பழக்கம் குறித்து தெரிவித்துள்ளார்.

சிறப்பு விசாரணைக்குழுவிடம் நடிகர் ஜெயராம் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயராம் அளித்த வாக்குமூலத்தில், "சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனத்துக்குச் செல்லும்போது அங்கு வைத்து உன்னிகிருஷ்ணன் போற்றியைப் பார்த்தேன். அதிலிருந்து அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. பூஜைகளுக்காகப் பலமுறை அவர் எனது வீட்டுக்கு வந்துள்ளார்.

உன்னிகிருஷ்ணன் போற்றி மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அவரது பணப் பரிவர்த்தனைகளோ, மோசடி செயல்கள் குறித்தோ எனக்கு தெரியாது.

உன்னிகிருஷ்ணன் போற்றி
உன்னிகிருஷ்ணன் போற்றி

சபரிமலை கோயில் திருநடைகளுக்கு சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் நிறுவனத்தில் வைத்து பூஜைகள் நடத்தியபோதும் அதில் நான் கலந்துகொண்டேன். கோட்டயம் இளம்பள்ளி கோயிலில் இருந்து திருநடையை ஊர்வலமாக எடுத்துச் சென்றபோதும் அதில் நான் கலந்துகொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயராமைச் சாட்சியாக மாற்ற சிறப்பு விசாரணைக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருநடை உபயமாக வழங்குவதாகக் கூறி உன்னிகிருஷ்ணன் போற்றி பலரிடம் பணம் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்தும் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க