என்னை இப்படி பார்க்கணும்னு அவர் ஆசைப்பட்டார்..! - Karthigaichelvan | KS | Disco ...
வேலூர்: சிறுமியிடம் பாலியல் சீண்டல்; பேச மறுத்ததால் மிரட்டல் - தீயணைப்பு வீரர் கைது
வேலூர் மாவட்டம், லத்தேரி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், வயது 31. இவர், வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், சசிகுமாருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுவந்திருக்கிறார் சசிகுமார். இதுபற்றி, சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்ததும், மகளை அவர்கள் கண்டித்திருக்கின்றனர். இதையடுத்து, சசிகுமாரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார் அந்த சிறுமி.

இதனால், ஆத்திரமடைந்த சசிகுமார், சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததோடு, சிறுமியின் அந்தரங்க போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து அசிங்கப்படுத்திவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.
இது குறித்து, சிறுமியின் தாய் காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில், `போக்சோ’ சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீயணைப்பு வீரர் சசிகுமாரைக் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர்.














