செய்திகள் :

`400 மீட்டர் பயணத்துக்கு ரூ.18,000' - அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை ஏமாற்றிய மும்பை டாக்சி டிரைவர்

post image

மும்பைக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். பொதுவாக மும்பையில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்சிகள் மீட்டரில் உள்ளபடிதான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவரிடம் டாக்சி டிரைவர் ஒருவர் ஏமாற்றி இருக்கிறார்.

அர்ஜெண்டினா அரியானோ என்ற அந்த பயணி எக்ஸ் தளத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில், ``நான் சமீபத்தில் மும்பை வந்தேன். ஹில்டன் ஹோட்டலுக்கு செல்ல டாக்சியில் ஏறினேன். இரண்டு பேர் என்னை அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்து சென்று 200(ரூ.18000) அமெரிக்க டாலர் பெற்றுக்கொண்டு என்னை ஹோட்டலில் கொண்டு போய்விட்டனர்.

ஆனால் அந்த ஹோட்டல் நான் ஏறிய இடத்தில் இருந்து 400 மீட்டர் தூரத்தில்தான் இருந்தது'' என்று குறிப்பிட்டு டாக்சி நம்பரையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த பதிவு வைரலானது. டாக்சி டிரைவர் பெண் சுற்றுலா பயணியை டாக்சியில் ஏற்றி 20 நிமிடம் சுற்றிவிட்டு அப்பயணியை ஏற்றிய இடத்திற்கு அருகில் கொண்டு வந்து ஹோட்டலில் இறக்கிவிட்டுள்ளார். அமெரிக்க பெண்ணின் பதிவை தொடர்ந்து மும்பை போலீஸார் தாங்களாக இதனை விசாரிக்க ஆரம்பித்தனர்.

டாக்சி பதிவு எண் அடிப்படையில் அதன் டிரைவர் தேஷ்ராஜ்(50) என்பவரை கைது செய்தனர். அவருடன் இருந்த நபரை தேடி வருகின்றனர். இப்புகார் குறித்து விசாரிக்கும்படி சாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் என்பவரிடம் துணை போலீஸ் கமிஷனர் மனீஷ் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் போலீஸார் அமெரிக்க சுற்றுலா பயணி தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று தகவல்களை சேகரித்தனர். அவர் ஜனவரி 12ம் தேதி ஹோட்டலுக்கு வந்துள்ளார். அடுத்த நாளே ஹோட்டலை காலி செய்துவிட்டு புனே சென்றுள்ளார். அங்கிருந்து அவர் அமெரிக்கா சென்றுவிட்டார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் மனோஜ் கூறுகையில்,'' பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற முயன்று வருகிறோம். அவர் தனக்கு நடந்த சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கூட கூறவில்லை'' என்றார்.

சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம்

இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடி கடனுடன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, 1998-99 காலக்கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் தானமாக வழங்கினார். அந்தத்... மேலும் பார்க்க

"பேசி சரிபண்ணிட்டேன்" - மின்சாரம் பாய்ந்து இறந்த ஐடிஐ மாணவர்; அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் பதில்

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: தடையை மீறி தீபமலை மீது ஏறிய பிக்பாஸ் அர்ச்சனா - வைரலான பதிவு; அபராதம் விதித்த வனத்துறை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தீப மலையைச் சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மலை உச்சியில் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை மீது ஏறுவதற்கு போத... மேலும் பார்க்க

இளம் பெண் பாலியல் வன்கொடுமை; சிக்கிய மூவர் - சென்னை அரசு கல்லூரி கேன்டீனில் நடந்த கொடூரம்

சென்னையில் அரசு கல்லூரி ஒன்றின் வளாகத்தில் கோட்டூரை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக கேன்டீன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி தம்பதிக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு - சென்னையைச் சேர்ந்த பெற்றோர் உட்பட 8 பேர் கைது

சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை, கிஷ்ணகிரியைச் சேர்ந்த தம்பதிக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவத்தில் குழந்தை மீட்கப்பட்டு குழந்தையின் பெற்றோர் உட்பட 8 பேர் கைது ச... மேலும் பார்க்க

`திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?' - ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை; வலுக்கும் கண்டனங்கள்

சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.மதுப... மேலும் பார்க்க