செய்திகள் :

`விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?' - செல்லூர் ராஜூ கேள்வி

post image

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  பெத்தானியாபுரம் 63 வது வார்டு ஈபி காலனியில்  புதிய நியாய விலைக் கடையை  முன்னாள் அமைச்சர்  செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, ``திமுக போல் தோல்வி கண்ட கட்சி கிடையாது. தொண்டர்களுக்கு கடிதம் எழுதி கட்சியை வளர்த்தவர் கலைஞர் கருணாநிதி. ஆனாலும் கூட்டணி இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது.

விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?. கரூர் துயர சம்பவத்தில் பிறகு மக்கள் அதிகமாக கூடுவார்கள் காரணத்தை கூறி பொதுவெளிக்கு வராமல் இருப்பது தவறு. காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால்,  மத்திய போலீஸ் வாங்கி பரப்புரைக்கு செல்லலாமே.

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காமல் அவர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தது கொடுமையானது. பொது வாழ்க்கையில் இப்படியெல்லாம் ஒரு நடைமுறையை பார்த்ததே இல்லை.

செல்லூர் ராஜூ

கருணாநிதி ஜெயிக்க காரணமாக இருந்தவர் எம்ஜிஆர்.  நடிகர் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும்.

சகோதரர் விஜயை நாங்களாக திட்டவில்லை. எங்களை திட்டினார் நாங்கள் திட்டினோம். தற்போது தவெக வினர் பேசியதை வாபஸ் பெற்றுள்ளனர். அதேபோன்று நாங்களும் அவர்களை பற்றி பேச மாட்டோம். அறைக்குள் அரசியல் செய்தால் எப்படி.

ஓ.பன்னீர்செல்வம் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதை கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது. ஊடகம் வழியாக தான் கேட்க வேண்டுமா? அவர் நடத்தும் நாடகத்தை எல்லாம் மக்கள் பார்த்து சலித்து விட்டார்கள். இந்த நாடகமெல்லாம் வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

சென்னை: 'திமுகவை புகழ்ந்து தள்ளிய பாஜக கவுன்சிலர்!' - ஜாலியாக கலாய்த்த உடன்பிறப்புகள்!

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சிக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. எப்போதும் எதிர்க்கருத்துகளை முன்வைத்து அமளி செய்யும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், இன்று திடீரென திமுகவை ஏகத... மேலும் பார்க்க

DMK vs Congress: டெல்லி டு சென்னை... கே.சி வேணுகோபால் வருகையின் அஜெண்டா என்ன? | பரபரக்கும் பவன்

தமிழக காங்கிரஸில் இப்போது இரண்டு கோஷ்டிகள் மல்லுக்கட்டுகின்றன. கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்போ, "40 முதல் 70 தொகுதிகள்வரை வேண்டும்; இல்லையெனில் அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும்... மேலும் பார்க்க

`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்சி கூட்டத்தில் கலகல!

மேயர் பிரியா தலைமையிலான மாநகராட்சிக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் ஐ.யூ.எம்.எல் கட்சியின் 61 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா முஷாபர், `மேயருக்கு எம்.எல்.ஏவாக ப்ரம... மேலும் பார்க்க

சீமான் போட்டியிடும் தொகுதிக்கு பாஜக பொறுப்பாளராகும் அண்ணாமலை - அதிர்ச்சியில் நாதக முகாம்!

சீமான் போட்டியிடுவதாக கூறப்படும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு பா.ஜ.க-வின் தேர்தல் சுற்றுபயண பொறுப்பாளராக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பது, நாம் தமிழர் கட்சி முகாமில் பேசுபொர... மேலும் பார்க்க

"மதுரை வடக்கு காங்கிரஸுக்கு.. திருப்பி அடிக்கவும் தெரியும்!" - தளபதியை சீண்டும் மாணிக்கம் தாகூர்

மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவினருக்குமிடையே கூட்டணி சண்டை சூடுபிடித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன் மொழிப்போர் தியாகிகள் நிகழ்வு ஒன்றில் பேசிய மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வு... மேலும் பார்க்க