செய்திகள் :

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: சிறையிலிருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பங்களில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு மற்றும் கருவறை திருநடையில் பூசப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு குறித்தும் ஐகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது.

இரண்டு தனித்தனி வழக்குகள் பதியப்பட்ட நிலையில் இரண்டு வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதல் பெயராக உன்னிகிருஷ்ணன் போற்றி குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய புள்ளிகள் குறித்து தகவல் வெளியானது.

அதைத்தொடர்ந்து தங்கம் சம்பந்தப்பட்ட அலுவலக புத்தகத்தைச் சரியாகப் பராமரிக்காதது உள்ளிட்ட தவறுகளைச் செய்ததாக சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர் முராரி பாபு, முன்னாள் எக்ஸிகியூட்டி ஆப்பீசர் சி.சுதீஷ்குமார், முன்னாள் திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ, முன்னாள் தேவசம்போர்டு கமிஷனர் என்.வாசு, முன்னாள் தேவசம்போர்டு தலைவர் ஏ.பத்மகுமார், முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர் எஸ்.ஸ்ரீகுமார், செம்புகவசத்தின் மீது பதிக்கப்பட்ட தங்கத்தகட்டை தனியாகப் பிரித்தெடுக்க உதவிய சென்னை ஸ்மார்ட் கிரியேசன் நிறுவன உரிமையாளர் பங்கஜ் பண்டாரி, சபரிமலையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை வாங்கிய கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கோவர்த்தன், திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார், சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு, திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் கே.பி.சங்கரதாஸ் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உன்னிகிருஷ்ணன் போற்றி
உன்னிகிருஷ்ணன் போற்றி

கோர்ட் வழிகாட்டுதல்படி வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் ஜாமின் கேட்டு கோர்டை நாடி வருகின்றனர். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட முராரி பாபு, ஸ்ரீகுமார், சுதீஷ்குமார் ஆகியோர் ஏற்கனவே ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே துவார பாலகர்கள் சிற்பத்தில் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்திருந்தது. ஆனாலும், திருநடையில் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் ஜாமின் கிடைக்காததால் அவர் சிறையில் தொடர்ந்து வந்தார்.

கைது செய்யப்பட்டு 90 நாட்கள் ஆகியும் எஸ்.ஐ.டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் இரண்டாவது வழக்கிலும் கடந்த மாதம் 21-ம் தேதி உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தது. இரண்டாவது வழக்கில் கோர்ட் வழங்கிய காவல் தேதி முடிவடையாததால் அவர் சிறையில் தொடர்ந்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி
சிறையில் இருந்து வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி

கோர்ட் காவல் தேதி முடிவடைந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் போற்றி தரப்பு கோர்ட்டை நாடியது. கேரளா மாநிலத்தில் இருந்து வெளியேறக்கூடாது, பத்தனம்திட்டா மாவட்டத்துக்குள் செல்லக்கூடாது, பாஸ்போர்ட் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும், அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும், சாட்சிகளை மிரட்டக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று மாலை உன்னிகிருஷ்ணன் போற்றி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். கரமனா சிறையில் இருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றியை அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் ஜாமின்  பெற்று வெளியே வந்துள்ளனர்.

பஞ்சாப்: குருத்வாரா அருகில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேராய் சுட்டுக்கொலை; பின்னணி என்ன?

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாடல் டவுனில் இருக்கும் குருத்வாராவிற்கு வெளியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேரா இன்று காலை தனது காரை நிறுத்திக்கொண்டிருந்தார்.அந்நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த மர... மேலும் பார்க்க

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து; 18 உடல்கள் மீட்பு; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

கணவன், மனைவி சண்டையை விலக்கிவிடச் சென்ற டிரைவர் கொலை; திருவள்ளூரில் சோகம்!

திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரின் மனைவி இந்துமதி. இவர்கள் காக்களூர் பகுதியில் வசித்து வந்தனர். இந்துமதிக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், அசோக்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்... மேலும் பார்க்க

Honeymoon murder: மேகாலயா சம்பவ பாணியில் `தேனிலவு அதிர்ச்சி' - கணவனைக் காதலன் மூலம் கொலைசெய்த மனைவி!

ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் பகுதியில் ஒரு தம்பதி மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மது போதை’ நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு - விலக்கி வைக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

புதுச்சேரி கிராமப்புற மதுக்கடை ஒன்றில் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சி, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் ஒரு இளைஞரு... மேலும் பார்க்க

காட்டிக்கொடுத்த டி.என்.ஏ. சோதனை; வாய்பேச முடியாத மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை

மும்பை தென்பகுதியில் வசிக்கும் வாய்பேச முடியாத 20 வயது பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் அவர் சைகை மூலம் தனது பாட்டியிடம் தெரிவித்தார். வயிற்றில் பூச்சிகள் ஊர்வது போன்று இருப்பதாக தெரிவித்தார... மேலும் பார்க்க