செய்திகள் :

’சமூகநீதி பேசும் ஆ.ராசா பெண்ணை பொருளாக, கூட்டணி கட்சிகளை அடிமைகளாக பார்க்கிறார்’ - காங்கிரஸ் சாடல்

post image

காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்ணை இழிவுபடுத்தும் சொல் பேசும் வாய், பண்பாட்டைப் பேச தகுதியற்ற வாய் என்று தமிழின் மரபே சொல்லும். ஆ.ராசா அவர்கள் தொடர்ச்சியாக வெளியிடும் கருத்துக்கள், அரசியல் விமர்சனத்தைத் தாண்டி பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்து வருகின்றன. ஒரு தருணத்தில் கூட்டணிக் கட்சிகளை ‘பொண்டாட்டிகள்’ என ஒப்பிட்டு அரசியல் நாகரிகத்தை களங்கப்படுத்தினார். எதிர்ப்பு கிளம்பியதும் பதிவை நீக்கினார். ஆனால் அதன்பின் வெளியிட்ட ‘என் வீட்டு தோட்டத்து இளநீர்’ என்ற உவமை, கூட்டணிக் கட்சிகளை தனக்குச் சொந்தமான சொத்தாகக் கருதும் ஆண்டான்–அடிமை மனநிலையையே வெளிப்படுத்துகிறது. அதிலும் ‘கூனி’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தும் அளவுக்கு தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலக சகோதரத்துவத்தைப் பாடிய தமிழ் மண்ணில், பெண்ணை அவமதிக்கும் மொழி பேசப்படுவது வெட்கக்கேடானது. ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என திருவள்ளுவர் கூறியுள்ளார். ஒரு அரசியல்வாதியின் வார்த்தை என்பது வெறும் சொல் அல்ல. அது சமூக மனநிலையை வடிவமைக்கும் சக்தி. அந்த வார்த்தைகள் பெண்களின் மரியாதையை காயப்படுத்தும் வகையில் இருந்தால், அது சாதாரண தவறு அல்ல - சமூகத்திற்கு எதிரான பொறுப்பற்ற செயல்.

சமூகநீதி, சமத்துவம் என்று மேடைகளில் பேசிக்கொண்டே, நடைமுறையில் பெண்களை பொருளாகவும் கூட்டணிக் கட்சிகளை அடிமைகளாகவும் பார்க்கும் மனநிலையே இன்று ஆ.ராசாவின் பதிவுகளில் வெளிப்படுகிறது. ‘அறம் செய விரும்பு’ என்று அவ்வையார் சொன்ன தமிழகம், ‘அவமதித்து அரசியல் செய்’ என்று ஒருபோதும் கற்றுக் கொடுக்கவில்லை. இப்போது தமிழகம் காத்திருப்பது அடுத்த பதிவை அல்ல... தன்னுடைய வார்த்தைகளுக்கான மனமாறிய மன்னிப்பைத்தான்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’நிதித்துறை அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது ஏன்?’ – செங்கோட்டையன் விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் புரட்சித் தளபதியை பொறுத்தவரை தமிழகம் வாழ வேண்டும் என்பதுதான் அவரது ந... மேலும் பார்க்க

'ரூ.20 லட்சம் வருமானம்; பெற்றோர் ஐஏஎஸ்... பிள்ளைகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு?' - உச்ச நீதிமன்றம் கேள்வி!

இந்தியாவின் இட ஒதுக்கீடுக் கொள்கையில் 'கிரீமிலேயர்' வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான மிக முக்கிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.கர்நாடக மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகமான... மேலும் பார்க்க

லால்குடியில் நழுவிய வெற்றி; அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு வாரியத் தலைவர் பதவி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் வெற்றி வாய்ப்பை இ... மேலும் பார்க்க

'அதிகாரமின்றி நிதானம் இழக்கும் திமுக!' - ஓர் அலசல்!

தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் முழுமையாக முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு ஒரு கூட்டணி அமைச்சரவை அமைந்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க

பக்ரீத்: 'நோ' பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் வெட்டுதல் - டெல்லி அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

வருகிற 28-ம் தேதி, பக்ரீத் பண்டிகை வர உள்ளது. இதை முன்னிட்டு, டெல்லியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி வளர்ச்சி அமைச்சர் கபில் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "பக்ரீத் ப... மேலும் பார்க்க

தென்காசி: கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்? - மனமுடைந்து விஷமருந்திய விவசாயி; உறவினர்கள் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய் புறம் வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். விவசாயியான இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பா... மேலும் பார்க்க