செய்திகள் :

சிறிய தலை, விஷம் கூட இல்லை; பெரிய முட்டையை விழுங்கும் பாம்பு வகை பற்றி தெரியுமா?

post image

பொதுவாக பாம்புகள் என்றாலே விஷத் தன்மை கொண்டவையாக இருக்கும். வேட்டையாடுதல் பண்பைக் கொண்டிருக்கும் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விஷமே இல்லாமல், பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் ஒரு விசித்திர பாம்பைப் பற்றித் தெரியுமா?

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘டாசிபெல்டிஸ் கான்சி’ (Dasypeltis gansi) எனும் பாம்பு தான் பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் தன்மையை கொண்டவையாக உள்ளது.

ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகளிலும், புல்வெளிகளிலும் காணப்படும் இந்த பாம்பு மிகவும் மெலிந்த உடலமைப்பையும், சிறிய தலையையும் கொண்டவையாக உள்ளன. இந்த பாம்பு தன்னைவிட பல மடங்கு பெரிய முட்டைகளை எப்படி விழுங்குகிறது என்பதுதான் ஊர்வன ஆய்வாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

snake

பொதுவாக வேட்டையாடும் பாம்புகளுக்கு இருக்கும் பெரிய தலை அல்லது தாடை அமைப்பு இதற்கு இல்லை. மாறாக இதன் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்புகள் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக உள்ளதாம்.

ஆய்வுகளின்படி, இந்த பாம்பின் வாய் பகுதி, அதன் உடல் அளவை ஒப்பிடும்போது சாதாரண பாம்புகளைவிட மூன்று முதல் நான்கு மடங்கு வரை விரிவடையும் தன்மையுடையது. இந்த பாம்பு பறவைகளின் கூடுகளைத் தேடிச் சென்று முட்டையை விழுங்குகிறது.

முட்டை தொண்டைக்குள் சென்றவுடன் பாம்பின் முதுகெலும்பில் உள்ள கூர்மையான எலும்பு அந்த முட்டையின் ஓட்டை உடைக்க உதவுகின்றன. பின்னர் முட்டையின் உள்ளே இருப்பதை மட்டும் உறிஞ்சிவிட்டு உடைந்த ஓட்டை அப்படியே வெளியே துப்பிவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக பாம்புகள் தங்களை தற்காத்துக்கொள்ள விஷத்தைப் பயன்படுத்தும் அல்லது இரையை இறுக்கிக் கொல்லும். ஆனால், இந்த ‘டாசிபெல்டிஸ் கான்சி’ பாம்புக்கு விஷமும் கிடையாது, இரையை இறுக்கும் வலிமையும் கிடையாது.

எதிரிகளிடமிருந்து தப்பிக்க தனது உடலில் உள்ள செதில்களை ஒன்றுடன் ஒன்று உரசி ஒருவித ஒலியை எழுப்பும். இதன் மூலம் தங்களை தற்காத்துக்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 442 ஆக உயர்வு

தென்கிழக்கு ஆசியா முழுவதும் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில், இந்தோனேசியாதான் பெரும் சேதத்தை... மேலும் பார்க்க

தாய் புலியை பிடித்துச்சென்ற வனத்துறை, ஆதரவின்றித் தவித்த 4 குட்டிகள்; மீட்கப்பட்ட பின்னணி

வனப்பகுதிகளில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக மாநிலம் விளங்கி வருகிறது. அதே வேளையில், புலிகளுக்கு விஷம் வைத்து கொல்வது முதல் வாகனங்களில் அடிபட்டு இறப்பது ... மேலும் பார்க்க

`பிடிப்பட்ட ஆண் புலி' - விடுவிக்க வனத்துறை தேர்வு செய்த இடத்துக்கான காரணம் இதுதான்!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் மனித- வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளின் எண்ணிக்கை மெல்ல மீண்டெழுந்தாலும் அவற்றுக்கான வாழிட போதாமை என்பது மிகப்பெர... மேலும் பார்க்க

டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை | Photo Album #Rain Alert 2025-26

டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை|குளிர்ச்சியடைந்த நெல்லை!#Rain Alert 2025-26Ditwah: இலங்கையில் 'டிட்வா' புயல் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு; அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு மேலும் பார்க்க

டிட்வா புயல்: 'படகுப் படை, மோப்ப நாய்கள்' - புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |Photo Album

டிட்வா புயல் / புதுச்சேரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..வீராம்பட்டினம் கடற்கரையில் போலிஸ் பாதுகாப்புகடலோர பாதுகாப்பு படை படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டள்ளன வெள்ள பாதிப... மேலும் பார்க்க

நாகை: டிட்வா புயலால் இரவு முழுவதும் தொடர்ந்த மழை - கரையில் நிறுத்தப்பட்ட 3,700 மீன்பிடி படகுகள்

இலங்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் டிட்வா புயல் தமிழ்நாட்டை நோக்கி நகரும், கடலோர மாவட்டங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. சென்னைக்கு தெற்கே 4... மேலும் பார்க்க