செய்திகள் :

சிறு குறு, பெரு விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு! - யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!

post image

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீட்டு அறிக்கையில், ``தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

வேளாண்மை

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025-ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி விவரங்கள்

கடன் தொகை குறு விவசாயிக்கான தள்ளுபடி கடன் தொகை (ரூபாயில்)சிறு விவசாயிக்கான தள்ளுபடி கடன் தொகை (ரூபாயில்)50,000 வரை கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி செய்யப்படுகிறது.

50,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு, அவர்கள் பெற்ற கடன் தொகை முழுவதும் (100 சதவீதம்) முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே அளவில் (50,000 ரூபாய் வரை) கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு, அவர்கள் பெற்ற கடன் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

50,001 முதல் 60,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 50,001 முதல் 60,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 40,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

கோப்புப்படம்
கூட்டுறவு வங்கி

60,001 முதல் 70,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 60,001 முதல் 70,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 30,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 15,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

70,001 முதல் 80,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 70,001 முதல் 80,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

80,001 முதல் 90,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 80,001 முதல் 90,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

90,001 முதல் 1,00,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 90,001 முதல் 1,00,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

தவெக விஜய்
தவெக விஜய்

1,00,000 ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 1,00,000 ரூபாய்க்குக் கூடுதலாகப் பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதேபோல் 1,00,000 ரூபாய்க்குக் மேல் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கும் 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

கூடுதல் விவரங்கள்:

மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெறும் 11 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை நான்கு முறை உயர்வு; கிட்டத்தட்ட ரூ.7 உயர்ந்தது!|Timeline

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் போர் தொடங்கியது. அன்றிலிருந்தே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை. கடைசியாக, 2022-ம் ஆண்... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; சென்னையில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

கிட்டத்தட்ட 10 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை இன்றுடன் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஈரான் போர் தொடங்கி வரும் வியாழக்கிழமையோடு (மே 28), மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன. பெட்ரோல், டீசல்இந்தியாவ... மேலும் பார்க்க

"பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்; முதுகில் குத்துவிட்டார்கள்!" - சாடும் உதயநிதி ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்கு ஆதரவு வழங்குவதாக, தவெ... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக உயர்ந்த விலை! - விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதி!

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் 'குழந்தைத் திருமணம்' - அப்போ, ஹெல்ப் லைன், கடுமையான சட்டங்களின் பயன்?

இந்தியாவில் பெண் 18 வயதிற்கு உட்பட்டவராகவும், ஆண் 21 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குத் திருமணம் நடந்தால், அது 'குழந்தைத் திருமணம்' என்று அழைக்கப்படுகிறது. குழந்தைத் திருமணங்கள... மேலும் பார்க்க

MK Stalin: "கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்" - ஸ்டாலின் வேண்டுகோள்

தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்றைய தினம் 23 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். தவெக ஆட்சியமைத்ததற்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டைத் தொடர்ந்து தற்போது தவெக அமைச்சரவையில... மேலும் பார்க்க