செய்திகள் :

`சூதாட்ட செயலி மூலம் பணம்; டிரைவர் வங்கி கணக்கில் ரூ.331 கோடி' - காங்கிரஸ் பிரமுகரிடம் ED விசாரணை

post image

சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இவ்வகை மோசடிகளுக்கு தங்களது சொந்த வங்கி கணக்கை பயன்படுத்துவதில்லை. அவர்கள் மற்றவர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவதுண்டு. சிலர் இவ்வாறான மோசடிகளுக்காக தங்களது வங்கி கணக்கை வாடகைக்கு வழங்குவதும் உள்ளது.

சமீபத்தில், குஜராத்தைச் சேர்ந்த இளம் அரசியல்வாதியான ஆதித்யா ஜுலாவிற்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் ரிசார்ட்டில் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த திருமணம் அமலாக்கத்துறையின் பார்வைக்கு வந்தது. திருமணத்திற்கான செலவு எங்கிருந்து வந்தது என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ஆதித்யாவின் வங்கி கணக்கிலிருந்து பணம் செலவு செய்யவில்லை என்பது தெரியவந்தது.

 திருமணம்
திருமணம்

இதையடுத்து மேற்கொண்டு விசாரித்ததில், ரேபிடோ கார் டிரைவர் சுக்ராமின் வங்கி கணக்கிலிருந்து திருமணத்திற்குத் தேவையான முழு பணமும் செலவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதுவும், ரேபிடோ டிரைவரின் வங்கி கணக்கிலிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக திருமணத்திற்காக செலவு செய்யப்பட்டிருந்தது.

வங்கி கணக்கில் ரூ.331 கோடி

மணமகன் ஆதித்யாவோ அல்லது மணப்பெண்ணோ எந்த விதத்திலும் தொடர்பில்லாத ரேபிடோ டிரைவரின் வங்கி கணக்கிலிருந்து இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும்விசாரித்தபோது, ரேபிடோ டிரைவரின் வங்கி கணக்கில் கடந்த ஒரு ஆண்டில் ரூ.331 கோடி அளவுக்கு தொகை டெபாசிட் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

மணமகன் ஆதித்யா
மணமகன் ஆதித்யா

பல்வேறு வழிகளில் ரேபிடோ டிரைவரின் வங்கி கணக்கிற்கு வந்த பணம் உடனடியாகவே பிற வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருந்தது.

டிரைவரின் வங்கி கணக்கை ஆதித்யா அவர் அறிவோடு பயன்படுத்துகிறாரா அல்லது டிரைவருக்குத் தெரியாமல் பயன்படுத்துகிறாரா என்பதைக் குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆதித்யா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

ரேபிடோ டிரைவரின் வங்கி கணக்கிற்கு வந்த பணம் முழுவதும் சூதாட்டத்திலிருந்தே வந்தது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1xBet என்ற சூதாட்ட செயலியில் நடந்த பண பரிவர்த்தனைகளிலிருந்தே இந்தத் தொகை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்‌பேங்கிங் விவரங்களை அடுத்தவர்களுடன் பகிரக்கூடாது என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கையெழுத்திட்ட காசோலைகளை பிறரிடம் கொடுக்கக்கூடாது என்றும், வங்கி கணக்கில் சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகள் நடந்தால் உடனடியாக புகார் செய்யும்படியும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்புஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியி... மேலும் பார்க்க

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப... மேலும் பார்க்க

``என்னை விட அழகா இருக்க கூடாது'' - 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்

தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகு... மேலும் பார்க்க

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறி... மேலும் பார்க்க