செய்திகள் :

தூத்துக்குடி: `மது குடிக்க பணம் தரவில்லை; அதனால்...'- தாயை அரிவாள்மனையால் தாக்கி கொன்ற மகன்!

post image

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறுவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு சுமதி என்ற மகளும், வேலுச்சாமி என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணியனின் சொந்த ஊர், தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளம். அங்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் குடும்பத்துடன் கயத்தாறுவில் தங்கி இளநீர் வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு சாலை விபத்தில் சுப்பிரமணியன் உயிரிழந்த நிலையில், மகன் வேலுச்சாமி மற்றும் தாயார் பாக்கியம் ஆகியோர் இளநீர் வியாபாரம் பார்த்து வந்தனர்.

கயத்தார்

கடந்த 2023-ம் ஆண்டு கண்ணாடிகுளத்தில் வசித்து வந்த முருகன் என்பவருக்கும் தனது மனைவி பேச்சியம்மாளுக்கும் திருமணம் மீறிய உறவு தொடர்ந்ததால், முருகனை அரிவாளால் வெட்டி தலையை கயத்தாறு அருகில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் வீசிச் சென்றார், வேலுச்சாமி. இந்த கொலை வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றுவந்த வேலுச்சாமி, கயத்தாறுவில் வாடகை வீட்டில் தாயாருடன் வசித்து வந்தார்.

வேலுச்சாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வேலுச்சாமி, தாயாரை வீட்டை விட்டு வெளியே தள்ளி கல்லால் தாக்கி அரிவாள்மனையால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.

கயத்தாறு

பாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதற்கிடையில் தலைமறைவான வேலுச்சாமியை போலீஸார் கைது செய்தனர். “மது அருந்த அம்மாவிடம் பணம் கேட்டேன். பணம் தர மறுத்தார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் கொலை செய்தேன்” எனச் சொல்லி போலீஸாரையே அதிர வைத்தார்.  

ராஜஸ்தான்: 170 ஏக்கரில் ரூ.275 கோடி மதிப்பிலான ஓபியம் தோட்டம் - கண்டுபிடித்து அழித்த காவல்துறை

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிலர் ஓபியம் எனப்படும் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் செடிகள் வளர்க்கப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்... மேலும் பார்க்க

நெல்லை: போதையில் கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டி கும்பல் - அச்சத்தில் பொதுமக்கள்!

மது போதையில் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு சாலையோரம் நின்ற அப்பாவிகளை சரமாரியாக வெட்டியது. இதில் வட மாநிலத் தொழிலாளி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `எவ்வளவு சொல்லியும் கேட்கல' - திருமணம் மீறிய உறவால் அக்காவை கொன்ற தம்பி

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகிலுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவரும், ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள பசுவந்தனையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ... மேலும் பார்க்க

ரூ.17 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருள் - தீயிட்டு அழித்த வேலூர் போலீஸ்

வேலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட 18 `குட்கா’ வழக்குகளில் 1,765 கிலோ எடையிலான குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதன் மதிப்பு சுமார் 17 லட்சம் ரூபாய் என்கிறது போலீஸ். இ... மேலும் பார்க்க

மும்பை: விளையாடச் சென்ற இடத்தில் தகராறு; ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவன்; என்ன நடந்தது?

மும்பை பாண்டூப் பகுதியில் வசித்து வந்தவர் சித்தார்த்(14). 8வது வகுப்பு படிக்கும் சித்தார்த், தான் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றான். ஆனால் அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை.அவனது பெற்றோர் பல... மேலும் பார்க்க

`நான் இஸ்ரோ விஞ்ஞானி'- 50 பெண்களிடம் திருமண ஆசைகாட்டி பண மோசடி; கோவாவில் சூதாட்டம்... சிக்கிய இளைஞர்

தற்போது மேட்ரிமோனியல் தளங்களில் இருக்கும் பெண்களின் தகவல்களை எடுத்து அப்பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்வது அதிகரித்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே பகுதியை சேர்ந்த பெண் சாப்ட... மேலும் பார்க்க