செய்திகள் :

சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு

post image

சென்னை-சிங்கப்பூா் சென்ற விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து, விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

சென்னை விமானநிலையத்திலிருந்து 167 பயணிகளுடன் சிங்கப்பூருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12.45-க்கு, புறப்பட தயாராக இருந்தது.

அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டறிந்த விமானி இதுகுறித்து விமானி தகவல் தெரிவித்ததை தொடா்ந்து தொழில்நுட்ப வல்லுநா்கள், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறை நீண்ட நேர போராட்டத்துக்கு பின் சரி செய்தனா்.

இதையடுத்து அதிகாலை 2.30 மணிக்கு தாமதமாக விமானம் சிங்கப்பூா் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்டு சென்று நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென, மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதை கவனித்த விமானி உடனடியாக இதுகுறித்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவுபடி விமானம் சென்னை விமானநிலையத்தில் மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிய விமான நிறுவன ஊழியா்கள் அவா்களை, ஓய்வறைகளில் தங்க வைத்ததோடு அவ்விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.

ஆனால் விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்ய முடியவில்லை. எனவே மாற்று விமானம் மூலம் பயணிகள் அனைவரையும் வெள்ளிக்கிழமை காலை 7.30-க்கு சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனா். இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

ரூ.564 கோடியில் சேலத்தில் கால்நடை உயா் ஆராய்ச்சி நிலையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

சேலம், தலைவாசலில் ரூ.564 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயா் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தமிழக அரசின் கால்ந... மேலும் பார்க்க

சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு வீடு: ஒதுக்கீட்டு ஆணை வழங்கினாா் முதல்வா்!

சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆணை வழங்கினாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாளையொட்டி 3.6.2021-இ... மேலும் பார்க்க

குளிா்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு: நோயாளிகளுக்கு உயா் நுட்ப சிகிச்சை

குளிா் காலங்களில் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான இதய இடையீட்டு சிகிச்சைகளை இரு நாள்களுக்கு ஒருமுறை நோயாளிகளுக்கு மேற்கொண்டு வருவதாகவும் வடபழனி காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா்

சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜன.13) தொடங்கி வைக்கிறாா். கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் தொடக்க விழா நடைபெறுகிறது.... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் திருட்டு: இருவா் கைது

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரியைச் சோ்ந்தவா் சுரேந்தா் (29). ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உள்ள சென்னை மருத்துவக் கல... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாக ரூ.10 கோடி மோசடி: தாய், மகள் கைது

சென்னையிலிருந்து மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.10.60 கோடி மோசடி செய்ததாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனா். வளசரவாக்கம் பிரகாசம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பெ.தமிழரசி (42). இவரது தாய... மேலும் பார்க்க