செய்திகள் :

சென்னை: சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்!

post image

வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் வேலப்பன் என்பவர், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் போலீஸார் வேலப்பனை போக்சோ வழக்கில் கைதுசெய்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்நிலையில் காவலர் வேலப்பனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சென்னை பெருநகர காவல், R-8 வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் P.வேலப்பன் (த.கா.51236) என்பவர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக W-26 அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, தலைமைக் காவலர் வேலப்பன் என்பவரை நேற்று (28.06.2026) கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 311 ன் கீழ், மேற்படி தலைமைக் காவலர் P.வேலப்பன் என்பவர் இன்று (29.05.2026) பணி நீக்கம் (Dismissal from Service) செய்யப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர்: குடிக்கத் தண்ணீர் கேட்ட வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை - மூவரிடம் போலீஸ் விசாரணை!

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பகுதியில் உள்ள ராமராஜன் கண்டிகை கிராமத்தில் பெண் ஒருவர் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் வீட்டின் வெளிபக்க இரும்பு கேட்டை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்... மேலும் பார்க்க

கணவர், அவரின் 2-வது மனைவி உட்பட 4 பேரை கொன்று எரித்த பெண்; கதறி அழுது நாடகம்... சிக்கியது எப்படி?!

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகில் உள்ள ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்தவர் ராம் சிங் செளதரி. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம் சிங் 2005ம் ஆண்டு சுனிதா என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணத்தின் ம... மேலும் பார்க்க

கன்னியாகுமரி சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: காவலர் கைது; விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவன், கடந்த 25-ம் தேதி தன் பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தன் மாமா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவ... மேலும் பார்க்க

சென்னை: மூதாட்டிக்கு நடந்த கொடூரம் - கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பீகார் இளைஞர்கள்!

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிடுவார். அதைப் போல சம்பவத்தன்றும் மூதாட்டி அதிகாலை நேரத்தில் வீட்ட... மேலும் பார்க்க

ஸ்டேஷனில் 8 மணி நேரம்; மருத்துவமனையில் 10 மணி நேரம் - பாலியல் கொடுமை செய்யப்பட்ட சிறுமி அலைக்கழிப்பு

மகாராஷ்டிரா மாநிலம், பீட் என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவர் உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மைனர் பெண்ணை கை, கால்களை கட்டிவிட்டு, கர்ச்சீப்பால் வாயை அடைத்துவிட்டு அந்த நபர்... மேலும் பார்க்க

ஆன்மிகம் டு நட்பு; நோ சொன்ன இளம்பெண்; AI மூலம் ஆபாசமாக சித்திரித்த சொற்பொழிவாளர் - கைதுசெய்த போலீஸ்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சுமித் சர்மா என்பவருடன் சமூக ஊடகம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. சுமித் சர்மா ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் ஆன்மிகம் தொடர்பாக அந்தப் பெண்ணுடன் சாட்டிங் செய்து வந்... மேலும் பார்க்க