செய்திகள் :

சென்னை: `நீ அழகாக இருப்பதால்தானே...' - மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்

post image

சென்னை பல்லாவரம், பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சனா பாத்திமா (29). இவருக்கும் முகமது அலி (31) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சனா பாத்திமா அவரின் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 15 -ம் தேதி சனா பாத்திமாவின் பெற்றோர் உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதுரைக்குச் சென்றுவிட்டனர். அதனால் வீட்டில் சனா பாத்திமா மட்டும் தனியாக இருந்தார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து சனா பாத்திமா பைக்கில் வீட்டுக்கு வந்தார். பின்னர் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகமது அலி, தன்னுடைய மனைவி சனா பாத்திமாவிடம் தகராறு செய்திருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

ஆசிட்

அதனால் ஆத்திரமடைந்த முகமது அலி, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சனா பாத்திமாவின் முகத்தில் வீசினார். வலியால் அலறி துடித்த சனா பாத்திமா, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. ஆனாலும் சனா பாத்திமாவை துரத்தியபடி முகமது அலி விரட்டிச் சென்றார். அவரிடமிருந்து தப்பிய சனா பாத்திமா அக்கம் பக்கத்தினரின் உதவியோடு உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கண் மருத்துவமனைக்கு சனா பாத்திமா சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக சனா பாத்திமா பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆசிட் வீசியதும் சனா பாத்திமா தப்பி ஓடும் சி.சி.டி.வி காட்சி சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

சனா பாத்திமா பேசுகையில், ``எனக்கும் என் கணவருக்கும் இடையே பல பிரச்னைகள் இருக்கின்றன. அதனால் தனியாக அம்மா வீட்டில் வசித்து வருகிறேன். விவாகரத்து கேட்டிருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு என்னுடைய கணவர் முகமது அலி என்னை தாக்கினார். அதனால் எனக்கு முகத்தில் காயம் இருந்ததால், என் தங்கையின் இல்ல நிகழ்ச்சிக்குக்கூட நான் செல்லவில்லை. வீட்டில் பூட்டு இல்லாததால் அதை வாங்க கடைக்குச் சென்றேன். அப்போது என் வீட்டின் அருகே முகமது அலி நின்றுக் கொண்டிருந்தார். அவர், என்னிடம் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறினார். உடனே நான், தங்கையின் வீட்டு நிகழ்ச்சிக்கு குழந்தை சென்றிருக்கிறாள் என்று கூறினேன். அதனால் ஆத்திரமடைந்த முகமது அலி, நீ அழகாக இருப்பதால்தானே வெளியில் வேலைக்குச் செல்கிறாய் என்று கூறியபடி ஆசீட்டை முகத்தில் வீசிவிட்டார். எரிச்சலால் வலியால் துடித்தேன். என்னுடைய இடது கண்ணில் பார்வை தெரியவில்லை. காவல் நிலையத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன். முகமது அலி தலைமறைவாகி விட்டதாக போலீஸார் சொல்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது" என்றார் கண்ணீர்மல்க

மெடிக்கல் ரிப்போர்ட்

இதுகுறித்து பல்லாவரம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``சனா பாத்திமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் எங்களுக்கு அங்கிருந்து தகவல் வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கே சென்று சனா பாத்திமாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்ததோடு வழக்கும் பதிவு செய்திருக்கிறோம். சனா பாத்திமா தப்பி ஓடி வரும் சி.சி.டி.வி. கேமரா காட்சியை ஆதாரமாக எடுத்திருக்கிறோம். அதனால் சட்டப்படி முகமது அலி மீது நடவடிக்கை எடுக்கப்படும். கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசீட்டை முகமது அலி பயன்படுத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

தூத்துக்குடி: பைக் ரிப்பேர் செய்ய பணம் கேட்டு மதுபோதையில் தகராறு; மகனைக் கொன்ற தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகிலுள்ள படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இவர்களுக்கு கனகராஜ், பாலபாரதி என இரண்டு மகன்கள் உள்ளனர். பாலபாரதி, திருவள்ளூர்... மேலும் பார்க்க

மும்பை: விபரீதத்தில் முடிந்த குடும்பச் சண்டை; மகன் கண்முன்னே மனைவியைக் கொன்ற கணவன்; என்ன நடந்தது?

மும்பை முலுண்ட் பகுதியில் வசிப்பவர் ராஜு குப்தா. இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பாவிற்கும், குப்தாவுக்கும் இடையே அடிக்கடி சிறிய சிறிய பிரச்னைகளுக்கெல்லாம் சண்டை ஏற்பட்டுக... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 பேரின் டிஎன்ஏ சேகரிப்பு- `காவல்துறை மீது நடவடிக்கை..' - நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டின் அருகிலுள்ள ... மேலும் பார்க்க

150 அறைகள் கொண்ட கவடியார் அரண்மனை... ரூ.2 கோடி மதிப்புள்ள மதிப்புமிக்க நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?

கேரளம் மாநிலத்தில் புகழ்பெற்ற மன்னர்களாக விளங்கியவர்கள் திருவிதாங்கூர் மன்னர்கள். திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் இன்றளவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசம் உள்ளது. மன்னர் க... மேலும் பார்க்க

சென்னை: பிரபல ரௌடி என்கவுன்ட்டர் - யார் இந்த `தொப்பை கணேஷ்'?

சென்னை வியாசர்பாடி பிவி காலனி சேர்ந்தவர் டில்லி கணேஷ் என்கிற பிரபல ரௌடி கணேஷ். இவருக்கு தொப்பை இருந்ததால் சக கூட்டாளிகளால் தொப்பை கணேஷ் என அழைக்கப்பட்டார். அதனால் போலீஸ் ரெக்கார்டில் இவரின் பெயர் தொப்... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்; நெல்லை பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் - அலறியடித்த பயணிகள்

நெல்லை மாவட்டம், பாலாமடையைச் சேர்ந்தவர் சுதாகர். இவரும் பக்கத்து ஊரான சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இருவரும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. ... மேலும் பார்க்க