செய்திகள் :

செய்தியாளர் சந்திப்பில் ஐ.ஜி ரம்யபாரதி குலுங்கி குலுங்கி சிரித்தது ஏ.ஐ. வீடியோவா? – நடந்தது என்ன?

post image

கோவையில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பந்தய சாலை பகுதியில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ரம்யபாரதி நேற்று முந்தினம் மாலை 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக காவலதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 3 மணிக்கு முன்பே செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அவரது அலுவலகத்தில் குவிந்தனர். செய்தி தொலைக்காட்சிகள் லைவ் செய்வதற்காக கேமராவுடன் காத்திருந்தனர்.

3 மணியளவில் ஐ.ஜி. ரம்ய பாரதி செய்தியாளர் சந்திப்பிற்கு வந்தார். மற்ற அதிகாரிகள் வர வேண்டும் என்பதற்காக செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்காமல் காத்திருந்தார். அப்போது கையில் வைத்திருந்த செய்தி அறிக்கையை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார்.

3.25 மணியளவில் மற்ற அதிகாரிகள் வந்ததும் வழக்கு தொடர்பாக பேச வேண்டியிருப்பதால், செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை அறைக்கு வெளியே சென்று காத்திருக்குமாறு போலீசார் கூறினர். அப்போது கேமராவில் இருக்கும் ஆடியோவையும் கட் செய்யுமாறு போலீசார் கூறியதால், அதன்படி ஒளிப்பதிவாளர்கள் ஆடியோவை கட் செய்துவிட்டு வெளியேறினர்.

ரம்ய பாரதி
ரம்ய பாரதி

அப்போது, அதாவது செய்தியாளர் சந்திப்புக்கு முன்னர், அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த ஐ.ஜி.ரம்யபாரதி குலுங்கி குலுங்கி சிரித்துள்ளார். அது அங்கு வைக்கப்பட்டு இருந்த சில தொலைக்காட்சிகளின் கேமராக்களில் லைவ்வாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஏ.ஐ-யால்  சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ என ஒரு தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் பல கேமராக்களிலும் ஐ.ஜி.ரம்யபாரதி சிரிக்கும் காட்சிகள் பதிவாகி இருப்பதால், இது ஏ.ஐ. வீடியோ அல்ல என்பது தெரியவந்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் செய்தி அறிக்கையை மட்டுமே வாசித்த ஐ.ஜி. ரம்யபாரதி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காமல், ’கடைசி கேள்வி’, ‘கடைசி கேள்வி’ என செய்தியாளர் சந்திப்பை முடிக்க வேண்டும் என்பதிலேயே மும்முரமாக இருந்தார். பின்னர் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளுக்கு அவர் ஆங்கிலத்தில் பேட்டி அளித்ததும், 4 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்தது.

மேகதாது அணை: "தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு" - கனிமொழி கண்டனம்

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேகதாது அணை விவகாரம் தொட... மேலும் பார்க்க

தென்காசி: காவல் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் வேதக் கோயில் தெருவை சேர்ந்தவர் அந்தோனிராஜ். 68 வயது நிரம்பிய விவசாயியான அவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் அரசின் நிதி உதவியுடன் வீடு கட்டி வருகிறார். அந... மேலும் பார்க்க

"பின்வாசல் வழியாக பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள்" - மாணிக்கம் தாகூருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தூத்துக்குடியில் இன்று (மே. 25) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். விசிக குறித்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., மாணிக்கம் தாகூர் குறித்... மேலும் பார்க்க

விழுப்புரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 'வீர வசனம் என்ன ஆனது?'- முதல்வர் விஜய்க்கு டிடிவி கேள்வி

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் ம... மேலும் பார்க்க

ரூ.500 ஓய்வூதியத்திற்காக மாமியாரை 9 கி.மீ தூரம் முதுகில் சுமந்து சென்ற மருமகள்! - சத்தீஷ்கர் அவலம்

சத்தீஷ்கர் மாநிலத்தில், மாநில அரசு முதியோர்களுக்கு மாதம் ரூபாய் 500 ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அந்த ஓய்வூதிய தொகையை பெற வங்கிகள் பல நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருக்கிறது. சத்தீஷ்கரில் உள்ள சுர்குஜா ம... மேலும் பார்க்க

'இந்தியா என்னை 100% நம்பலாம்; நான் மோடியின் மிகப்பெரிய ஃபேன்!' - சர்ப்ரைஸ் போன்காலில் ட்ரம்ப்

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ நான்கு நாள் இந்தியப் பயணத்தில் இருக்கிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில், 'அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை' கொண்டாடும் நிகழ்ச்சி ஒன... மேலும் பார்க்க