செய்திகள் :

"ஜாமீன் வேண்டாம்; நிரபராதியாகத்தான் வெளியே வருவேன்"- போக்ஸோ வழக்கில் இளைஞர் விடுதலையான பின்னணி என்ன?

post image

சேலம் மாவட்டம் எம். காளிப்பட்டியைச் சேர்ந்தவர் 32 வயதான கார்த்திக். சேலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியதாக கடந்த 2024- ம்‌ ஆண்டு இவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட மேட்டூர் மகளிர் காவல்துறையினர், கார்த்திக் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தனக்கும் இந்தப் புகாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென காவல்துறையினரிடம் திட்டவட்டமாகக் கூறி மறுத்து வந்திருக்கிறார் கார்த்திக்.

ஆனால், ஏற்க மறுத்த காவல்துறையினர், கார்த்திகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஜாமீனில் வெளியே வர விரும்பாத இளைஞர் கார்த்திக், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வந்திருக்கிறார்.

விடுதலையான கார்த்திக்
விடுதலையான கார்த்திக்

இந்த நிலையில், கார்த்திக்கால் கர்ப்பமானதாகச் சொல்லப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, அவருக்கு பிறந்த குழந்தை, குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக் ஆகிய மூன்று பேரிடமும் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைக்கும் கார்த்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை ஆய்வு முடிவுகளில் நிரூபணமாகியிருக்கிறது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் கார்த்திகை குற்றமற்றவர் என விடுதலை செய்திருக்கிறது.

இது குறித்து தெரிவித்த இளைஞர் கார்த்திக், "இந்தக் குற்றத்தில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லையென எவ்வளவோ சொன்னேன். ஆனால், காவல்துறையினர் கொஞ்சம் கூட கேட்கவில்லை. ஜாமீனில் வெளியே போனால் களங்கம் தீராது என்பதற்காகவே இரண்டு ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தேன். கடையில் நீதி வென்றிருக்கிறது" என்றார்.

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க