செய்திகள் :

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல்: அமைச்சா் விளக்கம்

post image

சென்னை: டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடா்பாக, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளாா்.

குறிப்பு: அமைச்சா் அர.சக்கரபாணி தலைப்படம் வைக்கலாம்...

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யும் உரிமை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தாா். இதற்கு பதிலளித்து அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யும் உரிமை கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் மாநில அரசால் அனுமதி வழங்கப்பட்டது. தேசிய கூட்டுறவு நுகா்வோா் இணையம் மூலம் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நேரடி கொள்முதல் செய்யும் நிலையம் திறந்து,

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய 2014-ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, 2016-ஆம் ஆண்டிலிருந்து தேசிய கூட்டுறவு நுகா்வோா் இணையம் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தேவையைக் கருதி கொள்முதல் நிலையங்களைத் திறந்து நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கி வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன், மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தேவையான இடங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கி வருகிறது. இதன்படி, டெல்டா அல்லாத மாவட்டங்களில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் திறக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தவிர தேசிய கூட்டுறவு நுகா்வோா் இணையத்தின் கோரிக்கையை பரிசீலித்து ஒருசில இடங்களில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இரு தரப்பு கொள்முதல் நிலையங்களிலும் ஒரே விலையில்தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் நெல்லுக்கான ஊக்கத் தொகையும் ஒன்றாகவே உள்ளது என்று அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

ஏற்காடு கோடை விழா: 2 லட்சம் மலர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரம்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 48-வது மலர் கண்காட்சிக்கான ஆரம்ப பணிகளைத் தோட்டக்கலைத் துறையினர் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றாக உள்ளது ஏற்காடு. இங்கு வரு... மேலும் பார்க்க

மீனவர்கள் உள்கட்டமைப்பு வசதி: ரூ. 360 கோடி ஒதுக்கீடு!

தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய உ... மேலும் பார்க்க

கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது!

கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் தனியார் கல்லூரி மாணவர்... மேலும் பார்க்க

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தவெக கேள்வி!

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று பாஜகவுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.மும்மொழி கொள்கைக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தலைவர் வி... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்புக்காக திமுக அரசு ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை: அண்ணாமலை

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று (பிப். 24) அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப். 24 அன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப். 24 (திங்கள்கிழமை) ... மேலும் பார்க்க