செய்திகள் :

தூத்துக்குடி: திருமணமான இரண்டே நாளில் நகை, பணத்துடன் மாயமான இளம்பெண்; பதறிய இளைஞர் - நடந்தது என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். பாஸ்கருக்குத் தெரிந்த ஒருவர் மூலம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த திருமண புரோக்கரான மூக்காண்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.  அவர், நாகர்கோவிலைச் சேர்ந்த திருமண பெண் புரோக்கர் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த ஆதரவற்ற இளம்பெண் உள்ளதாகக் கூறி அவரது புகைப்படத்தை பாஸ்கரிடம் காட்டி திருமணம் செய்து கொள்கிறீர்களா? எனக் கேட்டுள்ளார்.

திருச்செந்தூர்

பாஸ்கரும் தனக்கு பெண் கிடைத்த சந்தோஷத்தில் ஆதரவற்ற பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கூறி சம்மதித்துள்ளார். இதனையடுத்து இரண்டு புரோக்கர்களும் ரூ.40 ஆயிரத்தை கமிஷனாகப் பெற்றுக் கொண்டுள்ளனர். திருமணத்திற்கு தயாரான பாஸ்கர், அந்த பெண்ணிற்கு தேவையான சேலை, சுடிதார் என ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.

பின்னர், கடந்த 20-ம் தேதி, திருச்செந்தூர் சிவன்கோயில் பின்புறமுள்ள துர்க்கை அம்மன் கோயிலில் அந்த பெண்ணிற்கு 4 கிராமில் தங்கத்தில் தாலி கட்டி எளிமையாக திருமணம் செய்து கொண்டார். பின்னர், அந்த இளம்பெண்ணை பாஸ்கர் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 2 நாட்கள் அந்த இளம்பெண்ணுடன் பாஸ்கர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 22-ம் தேதி, பாஸ்கர் வீட்டிற்கு சமையல் செய்யத் தேவையான பொருட்களை வாங்கி வந்துள்ளார்.

திருச்செந்தூர் காவல் நிலையம்

மனைவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்துள்ளார். வீட்டில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் புதிய நகைகள் எதுவும் இல்லை. பாஸ்கரின் செல்போனில் இருந்த திருமணக்கோலத்தில் எடுத்துக் கொண்ட படங்கள், வீடியோக்களை அழித்துள்ளார். இதனால், தனக்கு பெண் பார்த்துக் கொடுத்த புரோக்கர் மூக்காண்டியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்பெண்ணைப் பற்றிய தகவல் கிடைக்காததால் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணமான இரண்டே நாளில் இளம்பெண் பணம், நகையுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து இறங்குவதில் தகராறு; கல்லூரி பேராசிரியரை குத்திக் கொன்ற சக பயணி!

மும்பையில் புறநகர் ரயில்தான் மக்களின் உயிர்நாடியாக விளங்குகிறது. காலை மற்றும் மாலை நேரத்தில் ரயிலில் ஏறி இறங்குவது என்பது சாதாரண மக்களால் முடியாத காரியம். ரயிலில் ஏறுவதாக இருந்தாலும், இறங்குவதாக இருந்... மேலும் பார்க்க

பெரம்பலூர்: போலீஸ் கஸ்டடியில் இருந்த ரௌடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! - 3 போலீஸார் காயம்

மதுரையைச் சேர்ந்த பிரபல ரௌடி வெள்ளைக்காளி. இவர் மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதுதவிர, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக வேறு ச... மேலும் பார்க்க

சிறை சென்ற கணவன்; திருமணம் மீறிய உறவில் மனைவி - ஜாமீனில் வந்த கணவன் கொடூர கொலை

ஆந்திரா மாநிலத்திலுள்ள பெதராவீடு பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவர், தனது திருமணம் மீறிய உறவை எதிர்த்ததால் கணவர் ஸ்ரீனுவை கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கிறது. அந்தப் பெண் தனது சகோதரனின் உத... மேலும் பார்க்க

`காட்டிகொடுத்த 7 வயது மகன்' - 50 வரை சரியாக எழுத தெரியாத 4 வயது மகளை அடித்து கொன்ற தந்தை!

குழந்தைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும். அதற்காக சில பெற்றோர் தங்களது குழந்தைகளை தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்த்து விட்டு படிக்க சொல்லி ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: பசியில் போலி டோக்கன் கொடுத்த பெண் தாக்கப்பட்டாரா? சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் மனைவி ஜெரினா ( வயது: 50 ). அம்மாபட்டினத்தில் உள்ள பள்ளிவாசலில் மெகராஜ் இஸ்லாமிய விழாவிற்காக டோக்கன் கொடுத்து உணவு வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

செல்போன் வெடித்து 27 பேர் பலியானதாக பரவும் ஆடியோ - எச்சரித்த தூத்துக்குடி போலீஸார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 17 விநாடிகள் மட்டுமே ஒரு சிறுவன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியும் வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. அதில் பேசும் சிறுவன், “தூத்த... மேலும் பார்க்க