செய்திகள் :

தஞ்சை: ஒன்றரை லட்சம் மகளிர்... நேரு தலைமையில் பரபரக்கும் மாநாடு ஏற்பாடுகள்!

post image

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நாளை மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொள்ள இருப்பதாக சொல்கிறார்கள்.

டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு

தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மகளிர் மாநாடு ஏற்பாட்டில் மகளிர் அணி நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

ஒரு வாக்கு சாவடிக்கு 10 முதல் 15 பெண்கள் வரை அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான வாகன வசதி கட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தலா ஒரு கருப்பு சிவப்பு சேலை, ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ.200 கொடுத்ததாக சொல்கிறார்கள். மாநாட்டு திடலில் அமர்ந்ததும் பெண்களுக்கு பை ஒன்று தருகிறார்கள். இதில் ஹாட்பாக்ஸ், ஸ்வீட், காரம் ஸ்நாக்ஸ் , தண்ணீர் பாட்டில் போன்றவை இருக்கும் என்கிறார்கள். குடியரசு தின விழாவை முடித்து விட்டு சென்னையில் இருந்து தஞ்சாவூர் வருகிறார் முதல்வர் ஸ்டாலின் சுமார் 4 மணியளவில் மேடையேறுவார் என்கிறார்கள்.

டெல்டா திமுக மகளிர் அணி மாநாடு

ஸ்டாலின் வரும் போது 50 பெண்கள் தாங்களே புல்லட், 200 பெண்கள் ஸ்கூட்டி ஓட்டியபடி அணிவகுத்து முதல்வர் ஸ்டாலினை அழைத்து வருகின்றனர். ஸ்டாலின் மேடை ஏறும் போது பெண்கள் கோலாட்டம் அடித்து ஆடியபடி வரவேற்பு கொடுக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் ஒன்றரை லட்சம் பெண்கள் மற்றும் குடும்பத்தினரை வாக்குகளாக மாற்ற வேண்டும் என திமுக தலைமை திடமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் சொல்கிறார்கள். இதற்காக பல்லடத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டை விட வெற்றிகரமாக அமையும் வகையில் கூடுதல் சிரத்தை எடுத்து அனைத்து நிர்வாகிகளும் வேலை செய்கின்றனர்.

மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை?" - கேள்வி எழுப்பும் தமிழிசை

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் ஈந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் நினைவ... மேலும் பார்க்க

”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு!

அதிமுகவின் முகமாக இருந்து சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்து வந்தவர், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தா... மேலும் பார்க்க

"சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்" - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதமர்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது ட்ரம்ப் அதிரடியாக வரி விதித்து வருகிறார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்... மேலும் பார்க்க

'எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடிமை ஆகமாட்டேன்!' - விஜய் உறுதி!

தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்திருந்தது. தமிழகம் முழுக்கவிருந்து வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியவை.விஜய்அவர் பேசியதாவது, 'நம்முடைய அரசியல் பயணத்த... மேலும் பார்க்க

'ஆம் ஆத்மி மாடல்; தவெகவுக்கு 2 கோடி ஓட்டு இருக்கு! - தவெகவின் 'பலே' கணக்கு!

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசியவை. நிர்மல் குமார்அவர்... மேலும் பார்க்க

பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா? - திருமாவளவன் சொன்ன பதில் என்ன?

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், தேமுதிக ம... மேலும் பார்க்க