செய்திகள் :

'தகுதிச்சான்றிதழ் பெற ரூ.20 லட்சம் லஞ்சம்' - பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

post image

பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். சரவணன் என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சக வரலாற்றுத்துறை பேராசரியரான வெங்கடேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பச்சையப்பன் கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி

இதுதொடர்பாக கல்லூரி தரப்பில் விசாரிக்கையில், 'வரலாற்றுத்துறையில் துணை பேராசிரியராக பணி செய்து வரும் வெங்கடேசன் என்பவர் பணி நிரந்தரம் பெறுவதற்கு மெட்ராஸ் யூனிவர்சிட்டியிடம் தகுதிச்சான்றிதழும் உயர்கல்வித்துறையின் அனுமதிக்கடிதமும் தேவை.

அந்த இரண்டையும் தான் பெற்று தருவதாகவும் அதற்கு ஈடாக 20 லட்ச ரூபாயை லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமென்று சரவணன் கேட்டிருக்கிறார். மேலும், அப்படி பணத்தை கொடுக்கவில்லையெனில் உன்னுடைய வேலை பறிபோகும், நிம்மதியாக வேலை செய்ய முடியாது என வெங்கடேசனையும் மிரட்டியிருக்கிறார்.

பச்சையப்பன் கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி

வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சரவணனை அழைத்து விசாரிக்கையில் அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்பதால் அவரை உடனடியாக இடைநீக்கம் செய்திருக்கிறோம். மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணையும் நடத்தவிருக்கிறோம். விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த சரவணன் மீது ஏற்கெனவே நிறைய புகார்கள் உள்ளன. ஏற்கெனவே இரண்டு முறை சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டிருக்கிறார்.' என்றனர்.

Bihar: 10-வது முறையாக முதல்வராகும் நிதீஷ் குமார்; புதிய அமைச்சரவை குறித்து வெளியான தகவல்!

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 206 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தன் ... மேலும் பார்க்க

வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள... மேலும் பார்க்க

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க