செய்திகள் :

'தகுதிச்சான்றிதழ் பெற ரூ.20 லட்சம் லஞ்சம்' - பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

post image

பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். சரவணன் என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சக வரலாற்றுத்துறை பேராசரியரான வெங்கடேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பச்சையப்பன் கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி

இதுதொடர்பாக கல்லூரி தரப்பில் விசாரிக்கையில், 'வரலாற்றுத்துறையில் துணை பேராசிரியராக பணி செய்து வரும் வெங்கடேசன் என்பவர் பணி நிரந்தரம் பெறுவதற்கு மெட்ராஸ் யூனிவர்சிட்டியிடம் தகுதிச்சான்றிதழும் உயர்கல்வித்துறையின் அனுமதிக்கடிதமும் தேவை.

அந்த இரண்டையும் தான் பெற்று தருவதாகவும் அதற்கு ஈடாக 20 லட்ச ரூபாயை லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமென்று சரவணன் கேட்டிருக்கிறார். மேலும், அப்படி பணத்தை கொடுக்கவில்லையெனில் உன்னுடைய வேலை பறிபோகும், நிம்மதியாக வேலை செய்ய முடியாது என வெங்கடேசனையும் மிரட்டியிருக்கிறார்.

பச்சையப்பன் கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி

வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சரவணனை அழைத்து விசாரிக்கையில் அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்பதால் அவரை உடனடியாக இடைநீக்கம் செய்திருக்கிறோம். மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணையும் நடத்தவிருக்கிறோம். விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த சரவணன் மீது ஏற்கெனவே நிறைய புகார்கள் உள்ளன. ஏற்கெனவே இரண்டு முறை சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டிருக்கிறார்.' என்றனர்.

``அதிமுக - தவெக கூட்டணி அமைத்து வென்றால், விஜய்யை காலி செய்து விடுவார் எடப்பாடி'' - டிடிவிதினகரன்

`SIR குறித்து ஏன் பயம்?'திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,"எஸ்.ஐ.ஆர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை அரசு நடத்தியிருந்தால் கல... மேலும் பார்க்க

சட்ட விரோத குவாரி: அறப்போர் இயக்கம் முன்னெடுத்த கூட்டத்தில் புகுந்த குண்டர்கள்!? - என்ன நடந்தது?

அறப்போர் இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் சட்டவிரோத கல்குவாரியால் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை ஆவணப்படுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது. அதில் சிலர் நுழைந்து மிரட்டல் விடுத்ததாக அறப்போர் இயக்கம் குற... மேலும் பார்க்க

SIR: ``இதைத் தவிர வேறு வழியில்லை'' - அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்ன? - முழு விவரம்

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள்... மேலும் பார்க்க

``SIR வாக்குரிமை பற்றியது அல்ல, குடியுரிமையை குறிவைக்கிறது பாஜக'' - திருமாவளவன் கடும் விமர்சனம்

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள... மேலும் பார்க்க