செய்திகள் :

தனியார் டிவி ரிப்போர்டரை வீடு புகுந்து தாக்கிய கும்பல்; கஞ்சா போதை காரணமா? திருவாரூர் போலீஸ் விசாரணை

post image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (38), இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரிப்போர்டராக வேலை செய்கிறார். நேற்று கோவிலூர் பகுதியில் செய்தி சேகரிக்க சென்று விட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இரவு வழக்கம் போல் வீட்டில் ஹாஜா தூங்கி கொண்டு இருந்துள்ளார். சுமார் 11.30 மணியளவில் அப்துல் பாசித் என்பவர் தலைமையில் மொத்தம் நான்கு பேர் ஹாஜா முகைதீன் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

கஞ்சா போதை கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான ஹாஜா

வீட்டில் இருந்த அவரது மாமியார் கதவை திறக்க ஹாஜா முகைதீனிடம் பேச வேண்டும் வரச்சொல்லுங்கள் என்றுள்ளனர். அவர்கள் போதையில் இருந்ததால் `ஹாஜா தூங்குறார் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம்' என சொல்லியிருக்கிறார். உடல், ரொம்ப அவசரம் என்று அவர்கள் சொல்ல, மாமியார் ஹாஜாவை எழுப்பி வரவைத்தார். அப்துல் பாசித் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்தவர் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அப்துல் பாசித் தன்னை தாக்கியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என ஹாஜாவிடம் சொல்லி அழைத்திருக்கிறார்.

`நான் ஸ்டேஷன்ல சொல்றேன், நீங்க போய் புகார் கொடுங்கள்' என ஹாஜா உடன் செல்வதற்கு மறுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அப்துல் பாசித் தரப்பு வலுக்கட்டாயமாக அழைக்க வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அப்துல் பாசித் கும்பல் கத்தியால் ஹாஜா நெஞ்சில் குத்தி கிழித்துள்ளனர். மேலும் பாட்டிலால் தலையில் அடித்து விட்டு செல்போனை பிடிங்கி கொண்டு தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த ஹாஜா மயக்கமடைய... அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த ஹாஜா தற்போது தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இது குறித்து ஹாஜா தரப்பினர், ``நள்ளிரவில் வீட்டுக்கு வந்து தாக்குதல் நடத்திய கும்பல் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது. ஒரு பத்திரிகையாளருக்கு இந்த நிலை என்றால் என்ன சொல்வது. போலீஸார் உரிய விசாரணை நடத்தி அந்த கும்பல் மீண்டும் இது போன்ற சம்வங்களில் ஈடுபடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை; பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர், சென்னையில் சிலை செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். மேலும், கூலித் தொழிலுக்கும் சென்று வந்துள்ளார். இவரும், பக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஆண் குழந்தை இல்லாததால் மனைவி மீது சந்தேகம்; பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இடத்தில் வசிப்பவர் சுக்காராம். வெல்டராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி திருமணம் மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேக... மேலும் பார்க்க

கெளதம் அதானி மீதான குற்ற வழக்குகள்; கைவிட்ட அமெரிக்க அரசு; தள்ளுபடி செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?

தொழிலதிபர் கெளதம் அதானி இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக அ... மேலும் பார்க்க

`அந்த வலையில் மாட்டிக்கொண்டேன்...'- நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் துவிஷா சர்மா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர், டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 2024-ல் ஒரு டேட்டிங் செயலி மூலம் போபாலைச் சேர... மேலும் பார்க்க

டிரைவருடனான பழக்கத்தை கைவிட மறுத்த அக்கா; வீட்டின் முன் கொடூரக் கொலை செய்த தம்பி - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் முத்துமாலை. இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசுடைமை வங்கியில் மேலாளராகப் பணிபுருந்து வந்தார். இவரும் இவரது... மேலும் பார்க்க

திருச்சி: திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி; தலையில் கல்லால் கொடூரத் தாக்குதல் நடத்திய இளைஞர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், திருச்சியில் தங்கி அங்குள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ படித்துக் கொண்டே, பகுதிநேர வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், சிவகங்கை மாவட்டம், ... மேலும் பார்க்க