செய்திகள் :

’தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதா?’ – செங்கோட்டையன் விளக்கம்

post image

கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “தென்மேற்கு பருவ மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழை குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. வயநாடு போல தமிழகத்தில் எதிர்காலத்தில் நடக்காத அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என ஒவ்வொரு துறையையும் முதல்வர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டார். எங்கெங்கு முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் உங்கள் மூலமாக நடவடிக்கையை துறை எடுக்கும்.

செந்தில் பாலாஜி கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. பொறுப்பற்றவர்கள் என்று சொல்வதற்கு அவருக்கு தகுதி இல்லை. செந்தில் பாலாஜி ஏன் தொடர்ந்து அமைச்சராக இருக்க முடியவில்லை என்பதை அவரிடம் கேட்க வேண்டும். அவர் அமைச்சரவையில் இடம் பெற முடியாமல் போனதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் என்ன சொல்லி இருக்கின்றது என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

பொதுவாக ஒவ்வொருவரும் ஒரு கட்சியின் கொள்கை லட்சியங்கள் எனத் தனித்தனியாக இருக்கின்றன. திமுக எடுக்கிற முடிவுகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது.

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம். அதற்கான பணிகளை முதல்வர் மேற்கொள்வார். 20 நாள்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்தது, உங்கள் வீட்டில் என்ன பிரச்னை வந்தது, ஆறு மாத காலத்திற்கு இந்த அரசு தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும். அதன் பிறகுதான் கேள்வி கேட்போம் என்று சொன்னார்கள்” என்றார்.  

ஆட்சிக்கு வந்தவுடன் கேள்வி கேட்கக்கூடாது என மிரட்டுகின்றீர்களா என்ற  கேள்விக்கு, “இந்த மாதிரி எல்லாம் கேட்கக்கூடாது. யாரையும் மிரட்டவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னையில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து  இருக்கிறோம். சூலூர் பகுதியில் நடந்த குற்றத்திற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது நாங்கள் மிரட்டும் தொனி எங்களிடம் கிடையாது. நாங்கள் சாப்ட் நேச்சர். எங்கள் தொனி எதுவும் மாறவில்லை. முதல்வர் படிப்படியாகச் செய்து கொண்டு இருக்கின்றார். அதற்கு ஒரு டைம் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பது சுலபம் பதில் சொல்வதற்கு என்னைப் போன்றவர்களுக்கு இருக்கும் கஷ்டங்களை உணர வேண்டும்” எனப் பதிலளித்தார்.

அண்ணாமலை கட்சி ஆரம்பித்து இருப்பது குறித்த கேள்விக்கு, “ஒவ்வொருவரும் இயக்கத்தைத் துவங்குவது ஜனநாயக உரிமை, அவர் அந்த உரிமையை நிலைநாட்டி இருக்கிறார். அவருக்கு இருக்கும் வேதனை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். பா.ஜ.க-வில் இருந்து வந்திருக்கிறார் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” எனப் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது, எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தால் மட்டும்தான் இலக்கை அடைய முடியும்” என்றார்.

இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு அழைப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “கூட்டணி மந்திரி சபை தற்போதுதான் உருவாகி இருக்கிறது. அதில் என்ன வாக்குறுதிகளைக் கொடுத்தோமோ, அதை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐயூஎம்எல் இடம்பெற்று இருக்கின்றனர். எங்களைப் பொறுத்தவரையில் திறந்த மனதுடன் இருக்கிறோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

நாங்களே இதற்கெல்லாம் பதில் சொல்வதைக் காட்டிலும் எங்களது கூட்டணியில் இருப்பவர்கள் நேரடியாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” எனப் பதிலளித்தார்.

தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, “அப்படி இல்லை, டிவிட்டரில் வந்தது வேறு. அந்த மாதிரி எந்தப் பெயரும் வைக்கவில்லை” எனப் பதிலளித்தார்.

"பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜக-வின் புதிய உத்தி" - அண்ணாமலையை விமர்சித்த பெ.சண்முகம்

அண்ணாமலை, பாஜக-வில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். பின்னாளில் அது கட்சியாக உருவெடுக்கும் என்றும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார... மேலும் பார்க்க

'ஜம்பம் அடித்த பிரவீன் சக்கரவர்த்தி; உஷ்ணமான விஜய்!' - கம்யூ.,க்களை தேடி ஓடிய காங்கிரஸ்

தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்ய சபா எம்.பி சீட்டை காங்கிரஸூக்கு கொடுத்திருந்தது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி இன்று தலைமைச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், இ... மேலும் பார்க்க

"நான் கிரிக்கெட்டைவிட்டு விலக தாதா தாவூத்தான் காரணம்" - லலித் மோடி அடுக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

தான் நிரந்தரமாக கிரிக்கெட் உலகை விட்டு விலகியதற்கு, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது 'டி-கம்பெனி' நெட்வொர்க் கொடுத்த கொலை மிரட்டல்கள்தாம் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்க... மேலும் பார்க்க

`மோடி எதிர்ப்பு மட்டுமே போதுமா?' - ஸ்டாலின் முடிவும் இந்தியா கூட்டணியின் எதிர்காலமும்? - ஓர் அலசல்!

2023 ஜூன் மாதத்தில் 28 கட்சிகளுடன் தொடங்கப்பட்ட 'இந்தியா' கூட்டணி, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் தனிப்பெரும்பான்மையைத் தடுத்து நிறுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தது. அந்த தேர்தலில், உத்த... மேலும் பார்க்க

Annamalai: 'பாஜக துணை தலைவர் டு தொண்டர்' - அண்ணாமலையின் கோவை REWIND | Photo Album

ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்று கோவைக்கு முதன்முதலில் வந்தபோது ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக கோவையில் அண்ணாமலை முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட 2... மேலும் பார்க்க

கோவை பாஜக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா – அண்ணாமலை அமைப்பில் ஐக்கியம்

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், முன்னாள் கோவை மாநகர மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தெற்கு மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் அக்கட்சியில்... மேலும் பார்க்க