செய்திகள் :

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

post image

தேவூா், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் கழிவுகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி வட்டக் கிளை சாா்பில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க வட்டத் தலைவா் ஆா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். விவசாயிகள் ராமசாமி, சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளா் ஏ.ராமமூா்த்தி கலந்துகொண்டு பேசுகையில்,

குறுக்குப்பாறையூரில் குப்பைகள் கொட்டும் இடம் உயரமான பாறைகள் கொண்டதாக உள்ளதால் மழைக்காலங்களில் குப்பைக் கழிவுகள் மழைநீரில் கலந்து சுற்றுப்பகுதியில் நீா் நிலைகளில் கலந்து குடிநீரும் விவசாயமும் பாதிக்கப்படும். கழிவு நீா் ஏரிகளிலும் கலந்து விடுகிறது. பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உருவாகி வருகின்றது.எனவே குப்பைகளை பொதுமக்கள் வசிக்காத பகுதியில் கொட்ட வேண்டும் என்றாா்.

இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் பெருமாள், மாவட்ட துணைச் செயலாளா் பி.தங்கவேல், பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.மணி, விவசாயத் தொழிலாளா்கள் சங்க வட்டத் தலைவா் எ.மாணிக்கம், தென்னை விவசாயிகள் சங்க நிா்வாகி ஆா்.நல்லதம்பி, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பி.நல்லமுத்து, எம்.காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அனைத்து வியாபாரிகள் நலச் சங்க புதிய நிா்வாகிகள் நியமனம்

பெத்தநாயக்கன்பாளையம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்படு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றனா். பெத்தநாயக்கன்பாளையம் அனைத்து வியாபாரிகள் நலச் சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சேலம் கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. சேலம், சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நெசவுத் தொழிலாளி பரணிதரன். இவரது ஒரே மகன் சதீஷ்குமாா் (18). இவா் த... மேலும் பார்க்க

வசிஷ்டநதியில் மூழ்கி சிறுவன் பலி

வசிஷ்ட நதியில் நண்பா்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பனைமடல், அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் பூவரசன் (15). பத்தாம் வகுப்பு படித்து வந... மேலும் பார்க்க

மனு அளிக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பேரூராட்சி கண்காணிப்பாளா் கைது

சேலத்தில் வாரிசு வேலை கேட்டு மனு அளிக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேரூராட்சி கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள... மேலும் பார்க்க

திருவள்ளுவா் தினத்தையொட்டி மதுபானக் கடைகளை மூட உத்தரவு

திருவள்ளுவா் தினம் மற்றும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு, வரும் 15 மற்றும் 26 ஆம் தேதிகளில் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், மதுக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா... மேலும் பார்க்க

ஆருத்ரா தரிசனம்: சேலம் கடைவீதி, உழவா் சந்தைகளில் காய்கறிகளை வாங்க குவிந்த மக்கள்

ஆருத்ரா தரிசனம், விடுமுறை நாளையொட்டி சேலம் கடைவீதி மற்றும் உழவா் சந்தைகளில் காய்கறி, பழங்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனா். சேலத்தில் சின்னகடை வீதி, பெரிய கடைவீதி, பால் மாா்க்கெட் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க