செய்திகள் :

`இரட்டை இலை' பானை; நயினார் செயலால் அண்ணாமலை ஷாக் - கோவை பாஜக பொங்கல் விழா ஹைலைட்ஸ்!

post image

பாஜக அகில இந்திய செயல் தலைவர் நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக நேற்று முன் தினம் கோவை வந்தார். சனிக்கிழமை மாலை தனியார் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி, பாஜக சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டம், பாஜக மாநில மையக்குழு கூட்டம் ஆகியவற்றில் நபின் கலந்து கொண்டார்.

பாஜக பொங்கல் விழா

நேற்று வடவள்ளி பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றார். பிறகு மருதமலை, பேரூர் கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு டெல்லி சென்றுவிட்டார். இவற்றில் பொங்கல் நிகழ்ச்சி தான் செம ஹைலைட்.

அந்தப் பகுதியில் காளை மாடு, எருமை மாடு சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சாலையின் 2 பக்கமும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்திருந்தனர். மேடையில் 5 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டன.. அந்த பானையில் இரட்டை இலை வரையப்பட்டிருந்தது. தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் போன்ற நிர்வாகிகள் முதலில் வந்து, வள்ளி கும்மி ஆடி பொங்கல் வைத்தனர்.

தமிழிசை

மேடையின் நடுவில் இருந்த பானையில் நபின் அரிசி, வெல்லம் ஆகியவற்றை போட்டார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் வந்த நபின் மிகவும் கஷ்டப்பட்டு “பொங்கலோ பொங்கல்.. பொங்கல் வாழ்த்துகள்” என்று தமிழில் சொன்னார்.

நபின் பேசிக் கொண்டிருக்கும்போது, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்த முயற்சித்தார். “அண்ணே முதலில் தலைவருக்கு போடுங்க” என்று அந்த துண்டை அண்ணாமலை அவரிடமே கொடுத்துவிட்டார்.

நயினார் நாகேந்திரன் அண்ணாமலை

அதன் பிறகு நயினார் நபினுக்கு துண்டு அணிந்து மரியாதை செலுத்தினார். சிறிது நேரத்தில் இன்னொரு துண்டு வந்தவுடன் நயினார், அண்ணாமலை பரஸ்பரம் துண்டு மரியாதை செலுத்தினார்.

வரவேற்புரையாற்றிய அண்ணாமலை தமிழிசை பெயரை மறந்துவிட்டார். நயினார் அதை நினைவூட்ட அப்போது அண்ணாமலை,”நமக்கு பிடித்தவர்களை அவ்வபோது மறந்துவிடுவோம். அப்படித்தான் தமிழிசை அக்கா” என்று சொல்லி சமாளித்தார்.

இரட்டை இலை பானை

நேற்று காலை கோவையில் மழை பெய்தது. தமிழிசை பேசும்போது, “இங்கு அனைத்து தலைவர்களும் உள்ளனர். பாஜக வந்தவுடன் கோவையில் சூரியன் மறைந்துவிட்டது. மழை கொட்டி நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து தாமரை மலர்ந்தே தீரும்” என்றார்.

கடைசியாக உறியடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. முதலில் நயினார் நாகேந்திரன் வேட்டியை மடித்துக் கட்டினார். நபினுக்கு நயினார் கண் கட்டிவிட்டார். அண்ணாமலை, “யார் கயிறு பிடித்திருக்கிறீர்கள். நான் எப்போது சொல்கிறேனோ ஏற்றி இறக்க வேண்டும்” என்று கூறினார். 4-5 முயற்சிகளில் நபின் பானையை தொட்டுவிட்டார்.

உறி அடிக்கும் நிகழ்வு

பானை உடையவில்லை. அவரிடம் இருந்து குச்சி வாங்கி நயினார் பானையை உடைத்தார். அவர்கள் அங்கிருந்து செல்லும்போது இரட்டை இலை அடையாளத்துடன் இருந்த பானை கரியாகியிருந்தது.!

கீழ்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் ரௌடி வெட்டிக் கொலை; ஆளும் அரசைச் சாடும் எதிர்க்கட்சிகள்!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், பிரசவ வார்டின் எதிரே உறங்கிக்கொண்டிருந்த பிரபல ரௌடி ஆதி (20) இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்ப... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சி: "ஸ்டாலினும், ராகுலும்தான் முடிவெடுக்கணும்" - ஐ.பெரியசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில்

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கி... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து! - 8 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரிப்பு

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சபாநாயகர் சகோதரனான மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 20 மடங்கு அதிகரித்துள்ளது. மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர... மேலும் பார்க்க

அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01

`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் ... மேலும் பார்க்க

நாகர்கோவில்: "கறுப்பு-சிவப்புக் கொடி பறக்க ஆரம்பித்த பிறகுதான் மாற்றங்கள் ஏற்பட்டன" - திருச்சி சிவா

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நாகர்கோவிலில்நடந்தது.விழாவிற்கு மாவட்... மேலும் பார்க்க

சிவசேனா: "பால் தாக்கரேவுக்கு இருந்த செல்வாக்கு தாக்கரே சகோதரர்களுக்கு இல்லை" - பட்னாவிஸ் தாக்கு

மும்பையில் வரும் 15ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே), இந்தியக் குடியரசு கட்சி போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.இக்கூட்டணி மும்பை மாநகராட்சிக்கான... மேலும் பார்க்க