செய்திகள் :

`தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதை பார்ப்பது..'- விஜய்யைச் சந்தித்த அதர்வா, கவின்

post image

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் அதர்வா. பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், நடிகர் அதர்வா மரியாதை நிமித்தமாக தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யை சந்தித்திருக்கிறார்.

அது தொடர்பாக அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்தது எனக்குக் கிடைத்த பெருமையும், உன்னதமான மகிழ்ச்சியும் ஆகும். என்னைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் நம் சொந்த "விஜய் அண்ணா" தான். முக்கியமான நாளுக்கு (BIG DAY) சற்று முன்பாக, அவருடைய அன்பையும் ஆசிகளையும் பெற்றது எனக்கு உலகமே கிடைத்தது போன்ற உணர்வைத் தருகிறது. மிக்க நன்றி, அண்ணா!

இதைச் சாத்தியமாக்கிய (முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு தனிச் செயலாளரான) ஜெகதீஷ் பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உண்மையிலேயே பணிவன்புடனும், நன்றியுணர்வுடனும் இருக்கிறேன். மனநிறைவோடு, மிகுந்த நேர்மறை ஆற்றலை உணர்கிறேன்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் அதர்வாவைப் போல நடிகர் கவினும் முதல்வரைச் சந்தித்திருக்கிறார். அது தொடர்பாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``சில மனிதர்கள், தங்களின் இயல்பான குணத்தாலேயே மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்கள். காலம் அவரது பயணத்தை மாற்றியிருக்கலாம், ஆனால் அவரது எளிமையையும், பணிவையும், கனிவையும் அது ஒருபோதும் மாற்றியதில்லை.

லட்சக்கணக்கானோரைப் போலவே நானும் அவரைப் பெரிய திரையில் பார்த்து வளர்ந்தவன். இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதைப் பார்ப்பது, தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு பெருங்கதை.

என் வாழ்நாளின் மிகச்சிறந்த பொக்கிஷமான தருணம் இது. இத்தனை ஆண்டுக்கால என் ஆசையை நிறைவேற்றி வைத்த (முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு தனிச் செயலாளரான) ஜெகதீஷ் பழனிசாமி அண்ணாவுக்கு மிக்க நன்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`தங்கம் கடத்தலை மையமாகக்கொண்டு உருவான கலீஃபா' - பிரித்விராஜ், மோகன்லால் படம் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸ்

பிரித்விராஜ், வைசாக் மற்றும் ஜினு ஆபிரகாம் கூட்டணியில் உருவாகும் சினிமா 'கலீஃபா. ​'பழிவாங்குதல் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்' என்ற டேக்லைனுடன் உருவாகும் இந்த சினிமாவில், 'மாம்பறக்கல் ஆமிர் அலி' என்... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் 'ஜெகன் மோகினி' குகை; 'குணா குகை'க்கு முன்பே பிரபலமான குகை தெரியுமா?

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் தண்ணீரில் மூழ்கியிருந்த ஜெகன் மோகினி குகை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. ஒகேனக்கல் கர்நடகாவில் உற்பத... மேலும் பார்க்க

எஸ். ஜானகி: மனித உணர்வுகளுக்குக் குரல் கொடுத்த இசைத் தவசி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

காற்றினிலே வரும் கீதம்...

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'எந்த மோதலும் இல்லை' - ஜானி மாஸ்டர் பதிவு; நடன சங்கப் பஞ்சாயத்தை தீர்த்து வைத்த சிரஞ்சீவி

தெலுங்குத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் சங்கத்தில் சமீபத்தில் ஒரு பிரச்னை. அந்தச் சங்கத்தின் தலைவர் நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா ஆவார். சங்கத்தில் சில நிர்வாகிகளுக்கான தே... மேலும் பார்க்க

Vikatan Cinema Awards மேடையில் 'South Indian Icon' நடிகை கீர்த்தி சுரேஷ்! | Photo Album

Vikatan Cinema Awards: "அடுத்த படத்துல இருந்து எனக்கு சம்பளம் தரணும்!" - 'சிறை' அக்‌ஷய் குமார் கலகல| Live மேலும் பார்க்க