செய்திகள் :

தவெக: பிள்ளையார்பட்டி கோயிலில் என். ஆனந்த்; கரூர் வழக்கு ஆவணங்களை வைத்து சிறப்பு வழிபாடு

post image

கரூர் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த பேரிடர் சம்பவத்தை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பிள்ளையார்பட்டி கோயிலில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த்
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த்

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. வேண்டுதல் தலமான இங்கு வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

இந்த நிலையில்தான் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் குடும்பத்தினருடன் வந்து சிறப்பு வழிபாடு செய்தார். திருச்சியிலிருந்து கார் மூலம் நேற்று மாலை பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலுக்கு வந்தவர், கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டவர், பின்பு வழக்கு ஆவணங்களை வைத்து வழிபட்டார்.

கரூர் கூட்ட நெரிசல் மரணம் குறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், அந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்; "இந்துத்துவா அரசியலைப் புகுத்தும் நடவடிக்கை" - பினராயி விஜயன் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நாடு முழுவதும் 4 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கிவைத்தார்.கேரள மாநிலம் எர்ணாகுளம் சவுத் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு... மேலும் பார்க்க

நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி

அமெரிக்காவின் நிதி மற்றும் கலாசார மையமான நியூயார்க் நகரத்தின் 111-வது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோஹ்ரான் மம்தானியின் (Zohran Mamdani) வெற்றி, நியூயார்க் அரசியலில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உரு... மேலும் பார்க்க

மபி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவு பரிமாறிய அவலம்; ராகுல் காந்தி கண்டனம் |வீடியோ

மத்திய பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு பரிமாறப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பதிவு ஒன்றைப் பதிவிட்டுள... மேலும் பார்க்க

Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்; 'தேச பக்தி' - புகழும் ரயில்வே - வலுக்கும் கண்டனம்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத், லக்னோ-சஹரன்பூர் வந்தே பார... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: `சாலையில் கிடந்த VVPAT ஆவணம்' - தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம் என்ன?

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.அங்குசிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR)மூலம் 47 லட்சம்... மேலும் பார்க்க

போதை: பள்ளிப் பேருந்தின்மீது கல்வீச்சு;`ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்'- எடப்பாடி பழனிசாமி காட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்பட... மேலும் பார்க்க