செய்திகள் :

ராஜபாளையம்: முதியோரின் ATM கார்டைப் பயன்படுத்தி நூதனத் திருட்டு; சகோதரர்கள் கைதான பின்னணி என்ன?

post image

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்த ரமேஷ் (57). இவர் அதே பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-ல் தனது ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க வந்துள்ளார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் ரமேஷுக்கு உதவுவது போல் நடித்து தங்களது ஏ.டி.எம் கார்டை முதியவரிடம் கொடுத்துவிட்டு முதியவரின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி 40 ஆயிரம் ரூபாய் திருடியதுடன், அதே ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி 75 ஆயிரம் ரூபாய்க்குப் பொருட்கள் வாங்கி அவரது வங்கிக் கணக்கில் இருந்த 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயைத் திருடியுள்ளனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

இதை அறிந்த முதியவர் ரமேஷ், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏ.டி.எம் மையத்திலிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், நூதன திருட்டில் ஈடுபட்ட இருவரும் வேலூர் மாவட்டம் பொய்கைநாவிதம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்களான கார்த்திக் 27, பார்த்திபன் 24, என்பது தெரியவந்தது.

ராஜபாளையம் SBI ATM
ராஜபாளையம் SBI ATM

இதையடுத்து வேலூருக்குச் சென்று சகோதரர்களைக் கைது செய்த போலீசார் அவர்கள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்குப் பயன்படுத்திவந்த சொகுசுக் காரையும் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

கொல்கத்தா: 4 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை; ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அவலம்

கொல்கத்தாவில் நான்கே வயதாகும் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி தனது பாட்டியுடன் கொல்கத்தா தாரகே... மேலும் பார்க்க

காரைக்குடி : காருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்; நகைகள் திருட்டு; சிக்கிய டிரைவர்!

காருக்குள் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் காரைக்குடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Murder (Representational Image)ச... மேலும் பார்க்க

கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் பலே மோசடி

கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் அருகே ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகப்பெரிய குடோனும், வாடிக்கையாளர்கள் ஆ... மேலும் பார்க்க

குஜராத்: மிளகாய்ப் பொடி தூவி நகைக்கடையில் திருட முயன்ற பெண்; சுதாரித்த கடைக்காரரால் வைரலான சம்பவம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஒருவர் நகைக்கடையில் மிளகாய் பொடியைத் தூவி கொள்ளையடிக்க முயன்று மாட்டிக்கொண்டுள்ளார்.அகமதாபாத்தில் உள்ள ரனீப் என்ற இடத்தில் இருக்கும் நகைக்கடை ஒன்றில் நகைக்கடை உரிமைய... மேலும் பார்க்க

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க