செய்திகள் :

கொல்கத்தா: 4 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை; ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அவலம்

post image

கொல்கத்தாவில் நான்கே வயதாகும் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி தனது பாட்டியுடன் கொல்கத்தா தாரகேஷ்வர் ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு, அவர்கள் போட்டிருந்த கொசு வலையை வெட்டி அந்தச் சிறுமி கடத்திச் செல்லப்பட்டிருக்கிறது.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை

சிறுமியைக் காணவில்லை என்று தேடியபோது, நேற்று மதியம் அந்த ரயில் நிலையத்தின் சாக்கடை அருகே ரத்த வெள்ளத்தில் சிறுமி மீட்கப்பட்டாள்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் சிறுமி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் பாட்டி கூறுகையில், "என்னுடன்தான் தூங்கிக் கொண்டிருந்தாள். நான்கு மணியளவில் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவளை எடுத்துச் சென்றது கூட எனக்கு தெரியவில்லை.

கொசு வலையை வெட்டி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இப்போது நிர்வாணமாக மீட்கப்பட்டிருக்கிறாள்.

எங்களுடைய வீட்டை இடித்துவிட்டார்கள். தெருவில்தான் வசிக்கிறோம். நாங்கள் எங்கே போக முடியும்? எங்களுக்குத்தான் எந்த வீடும் இல்லையே" என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.

இந்த வழக்கை போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்: முதியோரின் ATM கார்டைப் பயன்படுத்தி நூதனத் திருட்டு; சகோதரர்கள் கைதான பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்த ரமேஷ் (57). இவர் அதே பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-ல் தனது ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க வந்துள்ளார்.அப்போது ... மேலும் பார்க்க

காரைக்குடி : காருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்; நகைகள் திருட்டு; சிக்கிய டிரைவர்!

காருக்குள் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் காரைக்குடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Murder (Representational Image)ச... மேலும் பார்க்க

கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் பலே மோசடி

கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் அருகே ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகப்பெரிய குடோனும், வாடிக்கையாளர்கள் ஆ... மேலும் பார்க்க

குஜராத்: மிளகாய்ப் பொடி தூவி நகைக்கடையில் திருட முயன்ற பெண்; சுதாரித்த கடைக்காரரால் வைரலான சம்பவம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஒருவர் நகைக்கடையில் மிளகாய் பொடியைத் தூவி கொள்ளையடிக்க முயன்று மாட்டிக்கொண்டுள்ளார்.அகமதாபாத்தில் உள்ள ரனீப் என்ற இடத்தில் இருக்கும் நகைக்கடை ஒன்றில் நகைக்கடை உரிமைய... மேலும் பார்க்க

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க