செய்திகள் :

திமுக : `செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் ஆஃபர்?' - கொதிப்பில் சீனியர்கள்!

post image

சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டுவரும் நோக்கில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பல்வேறு கறார் முடிவுகளை எடுத்துவரும் கட்சித் தலைமை, `செந்தில் பாலாஜி'க்கு மட்டும் சில ஆஃபர்களை கொடுத்திருப்பதால் கொதிப்படைந்திருக்கிறார்கள் சீனியர்கள் பலர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அமைப்புரீதியாக மிகப்பெரிய மாற்றங்களுக்குத் தயாராகிறது தி.மு.க. கட்சியை 110 மாவட்டங்களாகப் பிரித்ததோடு, நிர்வாகப் பதவிகளுக்கு வயது உச்ச வரம்பையும் விதித்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். உட்கட்சித் தேர்தல் மூலமாக நிர்வாகிகளைத் தேர்வுசெய்யவும் முடிவெடுத்திருக்கிறார்.

'மறுசீரமைப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை' என ஒருசில சீனியர்கள் முகம்சுழிக்க 'கட்சிக்காக நீங்க இத ஏத்துக்கணும்' என கறார் காட்டியிருக்கிறார். அதுவே செந்தில் பாலாஜியிடம் மட்டும் தி.மு.க தலைமை நெகிழ்வுத் தன்மையுடன் நடந்துகொள்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், "கரூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் செந்தில் பாலாஜி, தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளை அவர் நிர்வகித்துவந்த நிலையில் தற்போது மறுசீரமைப்புக்கு பிறகு கரூர் மேற்கு, கரூர் கிழக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி, ஸ்டாலின்

கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜி கோவையில் எம்.எல்.ஏ ஆகியிருப்பதால் மறுசீரமைப்புக்கு பின் அவர் எந்த மாவட்டத்தில் மா.செ-வாக தேர்வு செய்யப்படுவார் என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில், 'உங்களுக்கு கரூர் வேண்டும் என்றால் கரூரை எடுத்துக் கொள்ளுங்கள், கோவை வேண்டும் என்றால் அதனை தேர்வு செய்யுங்கள்' என ஆப்ஷன் கொடுத்திருக்கிறது தலைமை.

ஒருவருக்கு எந்த ஊரில் வாக்கு செலுத்தும் உரிமை இருக்கிறதோ அந்த பகுதியில்தான் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படும். ஆனால், செந்தில் பாலாஜிக்கு மட்டும் விரும்பிய மாவட்டத்தை தேர்வு செய்ய ஆஃபர் கொடுத்திருக்கிறார்கள்" என்றனர்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி தரப்பில் இது குறித்து விசாரித்த போது, "கோவை மாவட்டத்தில் தி.மு.க வீக்காக இருப்பதால் அங்கே கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் தலைமை கோவைக்கு சென்றலும் சரிதான் எனச் சொல்கிறது. அதேநேரம், கரூர் இடைத்தேர்தல் வரயிருப்பதால் கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலவுகிறது. முடிவு செய்ய வேண்டியது அண்ணன் செந்தில் பாலாஜிதான்" என்றனர்.

`பிரதமர் முகம் விஜய்'- தவெக ஸ்டன்ட், அப்செட்டில் விசிக; கொந்தளிக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்!

'இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்' என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பிரசாரம் செய்துவருவதால், கடும் அப்செட்டில் இருக்கிறார்கள் வி.சி.க நிர்வாகிகள். 'பாஜக-வை வீழ்த்துவதே நோக்கம்' என்பதை முதல்வர் வி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை; எந்தெந்தக் கோயில்கள்?|முழுப் பட்டியல்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கும் வசதி கொண்ட கைப்பேசியை எடுத்துச் செல்லக் கூடாது எ... மேலும் பார்க்க

Mettur Dam: `93 ஆண்டுக்கால மேட்டூர் அணை வரலாற்றில் இது 62- வது‌ முறை!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கும் அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்படும் காவிரி ஆற்றுப்படுகையின் உயிர் நாடியாக விளங்குகிறது, மேட்டூர் அணை. சேலம் மாவட்டம், மேட்டூரில் அமைந்துள்ள இந்த பிரமா... மேலும் பார்க்க

சேகர் பாபு, மா.சுப்பிரமணியனுக்கே முன்னுரிமை - கொதிப்பில் உதயநிதி! தலைநகர் திமுக-வில் என்ன நடக்கிறது?

தலைநகர் தி.மு.க-வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவெடுத்திருந்தாலும், இன்னமும் சீனியர்கள் ஆதிக்கம் அதீதமாக இருப்பதாக குமுறத் தொடங்கியிருக்கிறார்கள் உதயநிதி ஆத... மேலும் பார்க்க

`சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்' - அதிமுக-வுக்கு தேர்தல் பணியாற்றிய நிறுவன ஊழியர்கள் வேதனை!

சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் மெய்நிகர் மீடியா நிறுவனம், நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சமூக வலைதளப் பக்கங்களில் விளம்பரங்களை செய்து தரும் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. சத்யமூர்த்த... மேலும் பார்க்க

Mettur dam: 4 டிஐஜிக்கள், 4 ஆயிரம் போலீஸார்; சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்கும் முதல்வர்

காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம் மேட்டூரில் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு குடிநீர் மற்றும் வேளாண் பயன்பாடுகளுக்குத் திறந்து விடப்படுகிறது. காவிரி ஆற்றுப்படுகைய... மேலும் பார்க்க