செய்திகள் :

திருச்சி: 'முறையாக சிகிச்சை அளிக்காததால் நான்கரை வயது மகன் பலி' - சிறுவனின் பெற்றோர் குற்றச்சாட்டு

post image

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கண்ணனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் தெரு நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது:34 ). இவரது மனைவி திவ்யா. இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவருடைய மகன் பிரஜன் (வயது: 4 1/2). இந்த சிறுவன் துறையூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு சரியாகி மீண்டும் சளி தொந்தரவு இருந்ததாக கூறப்படுகிறது. பிரஜனுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பெறுவதற்காக காலை 11. 30 மணி அளவில் சென்றுள்ளார்கள்.

சிறுவன்

ஆனால், பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் இல்லாமல் ஒரே ஒருவர் மட்டும் பணியில் இருந்து உள்ளார். அவர் நடுநிலை மருத்துவ உதவியாளர் என்று தெரிய வருகிறது. அங்கே சென்றபோது குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த நடுநிலை உதவியாளர் உடனடியாக 108 அவசர ஊர்த்தியை தொலைபேசி மூலம் அழைத்துள்ளார். அப்போது, செவிலியர் யாரும் இல்லாமல் 108 ஓட்டுநர் மட்டுமே வந்ததாக தெரிய வருகிறது. உடனடியாக தாமதிக்காமல் பெற்றோர்கள் அவர்களுடைய சொந்த வாகனத்தின் மூலமாக துறையூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்த போது சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த சிறுவனின் பெற்றோர் கூறுகையில்,

"கண்ணனூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சேர்த்து இந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. என் குழந்தை போல சுற்று வட்டார கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு இந்த நிலை ஏற்படக்கூடாது. அவசர உதவிக்கு சென்றால் கூட மருத்துவ செவிலியர் யாரும் பணியில் இருப்பதில்லை. இங்கு, இருக்கக்கூடிய செவிலியர் குடியிருப்பில் செவிலியர்கள் தங்குவதில்லை. முதல் உதவிக்கு சென்றால் மருத்துவர்கள் இருப்பதில்லை.

gh

எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக முழு நேரமாக செயல்படக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். அல்லது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில், இந்த சிறுவன் இறந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தருமபுரி: கால்பந்தாட்ட வீரர் தற்கொலை; போக்சோ வழக்கு பதிவு செய்ததுதான் காரணமா?

போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தலைமறைவான கால்பந்தாட்ட வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போக்சோதருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தை... மேலும் பார்க்க

சென்னை: `நீ அழகாக இருப்பதால்தானே...' - மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்

சென்னை பல்லாவரம், பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சனா பாத்திமா (29). இவருக்கும் முகமது அலி (31) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு ம... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பைக் ரிப்பேர் செய்ய பணம் கேட்டு மதுபோதையில் தகராறு; மகனைக் கொன்ற தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகிலுள்ள படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இவர்களுக்கு கனகராஜ், பாலபாரதி என இரண்டு மகன்கள் உள்ளனர். பாலபாரதி, திருவள்ளூர்... மேலும் பார்க்க

மும்பை: விபரீதத்தில் முடிந்த குடும்பச் சண்டை; மகன் கண்முன்னே மனைவியைக் கொன்ற கணவன்; என்ன நடந்தது?

மும்பை முலுண்ட் பகுதியில் வசிப்பவர் ராஜு குப்தா. இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பாவிற்கும், குப்தாவுக்கும் இடையே அடிக்கடி சிறிய சிறிய பிரச்னைகளுக்கெல்லாம் சண்டை ஏற்பட்டுக... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 பேரின் டிஎன்ஏ சேகரிப்பு- `காவல்துறை மீது நடவடிக்கை..' - நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டின் அருகிலுள்ள ... மேலும் பார்க்க

150 அறைகள் கொண்ட கவடியார் அரண்மனை... ரூ.2 கோடி மதிப்புள்ள மதிப்புமிக்க நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?

கேரளம் மாநிலத்தில் புகழ்பெற்ற மன்னர்களாக விளங்கியவர்கள் திருவிதாங்கூர் மன்னர்கள். திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் இன்றளவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசம் உள்ளது. மன்னர் க... மேலும் பார்க்க