செய்திகள் :

``திருமணத்தின் புனிதம், அடக்குமுறை துன்பத்தை தாங்கிக்கொள்வதில் இல்லை''- உயர்நீதிமன்றம் உத்தரவு

post image

"கணவரின் வயது மூப்பின் காரணமாக தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அவரது துன்புறுத்தல் வாழ்நாள் முழுவதும் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது" என்று, ரத்து செய்யப்பட்ட தண்டனையை மீண்டும் வழஙகி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றக் கிளை.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் இளம்பெண் ஒருவருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததை கண்டித்ததால் தன்னை தாக்கி, உணவு வழங்காமல் பராமரிக்காமல் தனிமைப்படுத்தி துன்புறுத்துவதாக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் கணவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும, ரூ 5000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

மனைவிக்கு துன்புறுத்தல்
மனைவிக்கு துன்புறுத்தல்

இதை எதிர்த்து கணவர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், நேரடி சாட்சிகள் இல்லையென்று விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து அப்பெண் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவில், "திருமணத்தின் புனிதம் அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக பொறுத்துக்கொள்வதில் இல்லை. அந்த உறவின் உண்மையான சாரம்சம், பரஸ்பரம் மரியாதை, நட்பு மற்றும் கருணையில்தான் உள்ளது.

இவ்வழக்கில் வயது முதிர்ந்த பெண் குடும்ப மரியாதை, திருமண புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் அவமதிப்பு புறக்கணிப்பை எதிர்கொண்டுள்ளார்.

உடல், மன ரீதியான துன்புறுத்தல்களை சகித்துக்கொள்ளும் தலைமுறையைச் சேர்ந்த இந்திய பெண்களின் பிரதிநிதிதான் மனுதாரர்.

வயதான கணவரை தண்டிக்க வேண்டும் என்றே மனைவி கோருவது பழிவாஙகும் நடவடிக்கை அல்ல. மனைவியை தனிமைப்படுத்தி உணவு, மரியாதையை பறித்துவிட்டால் அது துன்புறுத்தல் எனும் வரம்பை தாண்டி விடுகிறது.

ஒவ்வொரு செயலுக்கும் நேரடி சாட்சி வேண்டும் என கூறுவது சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும். முதியவர் என்பதற்காக தண்டனையில் சலுகை கோருவது ஏற்புடையதல்ல. முதியவருக்கு அதிக பொறுப்பு உண்டு.

மனைவிக்கு துன்புறுத்தல்
துன்புறுத்தல்

குடும்பம், மரியாதை என்ற பெயரில் துன்புறுத்தல் மறைந்திருக்கும்போது அம்முகமூடியை சட்டம் அகற்ற வேண்டும்.

கணவரின் வயது மூப்பின் காரணமாக அவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அவரது துன்புறுத்தல் வாழ்நாள் முழுவதும் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை விடுதலை செய்த மாவட்ட நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் ரூ 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. எனவே மீதமுள்ள தண்டனை காலத்தை அனுபவிக்க அவரை சிறையில் அடைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

அரசியல்வாதிகள் - போலீஸ் கூட்டணி: தொழிலதிபர்களை மிரட்டி ரூ.100 கோடி சேர்த்த உ.பி. போலீஸ் அதிகாரி!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் துணை போலீஸ் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் ரிஷிகாந்த் சுக்லா. ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆன சுக்லா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கும் மேலாக சொத்துகள... மேலும் பார்க்க

ஓசூர்: மகளிர் விடுதி குளியல் அறையில் கேமரா; ஒடிசா பெண் கைது - வீடியோவை ஆண் நண்பனுக்கு அனுப்பினாரா?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள சூளகிரி தாலுகாவுக்குஉட்பட்ட கிராமமான உத்தனப்பள்ளியில், `டாடா எலெக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னனு பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை செயல்... மேலும் பார்க்க

``மீன்பிடித்து படிக்கவைத்த காதலன்; வேலை கிடைத்ததும் கைகழுவிய காதலி'' - போலீஸ் வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜின் (35). இவர் முள்ளூர்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மரியதாஸ்–புஸ்பரதி ஆகியோரின் மகள் கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணை க... மேலும் பார்க்க

திருப்பூரில் சொத்து தகராறு? ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் பலியான சோகம்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ராமசாமி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (43). ஓவிய ஆசிரியர். இவரது மனைவி திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த கெளசல்யா (40). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.தம்பத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சம்பவ நாளில் பணியிலிருந்த 12 போலீஸார் CBI விசாரணைக்கு ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கரூர் சுற்றுலா மாளிகையில் தற்காலிக முகாமை அமைத்து, சி.பி.... மேலும் பார்க்க

சேலம்: வனத்துறை குடியிருப்பின் பூட்டை உடைத்து 90 துப்பாக்கித் தோட்டாக்கள் திருட்டு; 4 பேர் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் நீதிமன்றம் அருகே வனத்துறைக்குச் சொந்தமான குடியிருப்பு உள்ளது. இதில் வனச்சரகர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் குடியிருக்கின்றனர. மேலும், அங்கு வனத்துறைக்குச் சொந்தமான ஆவணங்கள், துப்... மேலும் பார்க்க