செய்திகள் :

``திருமணத்தின் புனிதம், அடக்குமுறை துன்பத்தை தாங்கிக்கொள்வதில் இல்லை''- உயர்நீதிமன்றம் உத்தரவு

post image

"கணவரின் வயது மூப்பின் காரணமாக தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அவரது துன்புறுத்தல் வாழ்நாள் முழுவதும் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது" என்று, ரத்து செய்யப்பட்ட தண்டனையை மீண்டும் வழஙகி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றக் கிளை.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் இளம்பெண் ஒருவருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததை கண்டித்ததால் தன்னை தாக்கி, உணவு வழங்காமல் பராமரிக்காமல் தனிமைப்படுத்தி துன்புறுத்துவதாக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் கணவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும, ரூ 5000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

மனைவிக்கு துன்புறுத்தல்
மனைவிக்கு துன்புறுத்தல்

இதை எதிர்த்து கணவர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், நேரடி சாட்சிகள் இல்லையென்று விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து அப்பெண் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவில், "திருமணத்தின் புனிதம் அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக பொறுத்துக்கொள்வதில் இல்லை. அந்த உறவின் உண்மையான சாரம்சம், பரஸ்பரம் மரியாதை, நட்பு மற்றும் கருணையில்தான் உள்ளது.

இவ்வழக்கில் வயது முதிர்ந்த பெண் குடும்ப மரியாதை, திருமண புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் அவமதிப்பு புறக்கணிப்பை எதிர்கொண்டுள்ளார்.

உடல், மன ரீதியான துன்புறுத்தல்களை சகித்துக்கொள்ளும் தலைமுறையைச் சேர்ந்த இந்திய பெண்களின் பிரதிநிதிதான் மனுதாரர்.

வயதான கணவரை தண்டிக்க வேண்டும் என்றே மனைவி கோருவது பழிவாஙகும் நடவடிக்கை அல்ல. மனைவியை தனிமைப்படுத்தி உணவு, மரியாதையை பறித்துவிட்டால் அது துன்புறுத்தல் எனும் வரம்பை தாண்டி விடுகிறது.

ஒவ்வொரு செயலுக்கும் நேரடி சாட்சி வேண்டும் என கூறுவது சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும். முதியவர் என்பதற்காக தண்டனையில் சலுகை கோருவது ஏற்புடையதல்ல. முதியவருக்கு அதிக பொறுப்பு உண்டு.

மனைவிக்கு துன்புறுத்தல்
துன்புறுத்தல்

குடும்பம், மரியாதை என்ற பெயரில் துன்புறுத்தல் மறைந்திருக்கும்போது அம்முகமூடியை சட்டம் அகற்ற வேண்டும்.

கணவரின் வயது மூப்பின் காரணமாக அவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அவரது துன்புறுத்தல் வாழ்நாள் முழுவதும் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை விடுதலை செய்த மாவட்ட நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் ரூ 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. எனவே மீதமுள்ள தண்டனை காலத்தை அனுபவிக்க அவரை சிறையில் அடைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க