செய்திகள் :

திருமணத்தை நிறுத்திய பெண் உடலில் HIV ரத்தத்தை செலுத்திய வாலிபர்; விரக்தியில் பெண் எடுத்த முடிவு

post image

ஐதராபாத்தை சேர்ந்த சேர்ந்தவர் மனோகர். இவருக்கும் அவரது உறவுக்கான 24 வயது பெண்ணிற்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மனோகர் பெற்றோருக்கு எச்.ஐ.வி தொற்று இருந்தது. எனவே மனோகருக்கு எச்.ஐ.வி இருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதி அப்பெண்ணின் பெற்றோர் மனோகருக்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் மனோகருக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மனோகருடனான தனது திருமணத்தை அப்பெண் உடனே ரத்து செய்துவிட்டார்.

இதனால் கோபத்தில் மனோகர் தனது உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை எடுத்து அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அப்பெண்ணின் உடம்பில் கட்டாயப்படுத்தி செலுத்திவிட்டு சென்றுவிட்டார்.

HIV
HIV

இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அப்பெண் மிகவும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் வசித்து வந்தார். திடீரென அப்பெண் தனது வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். உடனே அவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். எச்.ஐ.வி காரணமாக மன அழுத்ததில் இதுபோன்ற ஒரு விபரீத முடிவை எடுத்ததாக இன்ஸ்பெக்டர் பொச்சரன் தெரிவித்தார்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்ட விதத்தால் தான் இது போன்ற முடிவை எடுத்ததாக அப்பெண் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே மனோகர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்கொலை எண்ணம் தவறானது. தற்கொலை தண்டனைக்குரிய குற்றம்

கும்பமேளா புகழ் மோனலிசா மைனர்; காதல் கணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு!

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் பாசி மாலை விற்று சோசியல் மீடியாவில் புகழ் பெற்றவர் மோனலிசா. இவர் திடீரேன கடந்த சில மாதங்களுக்கு கேரளாவில் திருவனந்தபுரம் அருகே திடீரென கோயில் ஒன்... மேலும் பார்க்க

வீட்டில் மூட்டைகளில் பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீப்பிடித்தது. இதனால் தீயை அணைத்தபோது வீட்டில் சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தத... மேலும் பார்க்க

ஸ்பைடர் மேனுக்கே சவால் விடும் 89 வயது பாட்டி! - 27-வது மாடியிலிருந்து அசால்ட்டாக இறங்கி சாகசம்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் வசிக்கும் 89 வயது மூதாட்டி ஒருவர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் 27-வது மாடியில் எதிர்பாராத விதமாகப் படுக்கையறைக்குள் சிக்கிக்கொண்டார். கதவு தானாகப் பூட்டிக்கொண்ட நிலையில், ... மேலும் பார்க்க

ஆந்திரா: நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம்; நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவிகள்!

ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திராவின் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு ஜம்புவலசா கிராமத்தைச... மேலும் பார்க்க

தொழிலதிபர் ஆனந்த் அம்பானி பிறந்தநாள் பார்ட்டி - குஜராத்தில் குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முகேஷ் அம்பானி உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் நடத்தி வைத்தார். இப்போது ஆனந்த் அம்பானியின் பிறந்த நாளும் வித்தியாசமான முறையி... மேலும் பார்க்க

துரத்திய போலீஸ்; குளத்திற்குள் 5 மணி நேரம் பதுங்கி இருந்த திருடர்; தாமரை தண்டு மூலம் சுவாசித்தாரா?

மத்தியப் பிரதேசத்தில் திருடன் ஒருவன் போலீஸாரிடமிருந்து தப்பிக்கச் செய்த காரியம் போலீஸாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அங்குள்ள ரயில்களில் அடிக்கடி பெண்களிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவ... மேலும் பார்க்க