செய்திகள் :

`திருமணம் செய்து வைப்பதாகக்கூறி வரவழைத்து கொன்றோம்' மகளின் கண்முன்னே காதலனை கொலை செய்த தந்தை

post image

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். சென்னையில் சிற்பக்கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் பக்கது ஊரான கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த உறவினர் கனகலெட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த சஞ்சய், கடந்த 17-ம் தேதி மீண்டும் சென்னைக்குச் செல்ல பேருந்திற்காக கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் பேச வந்த காதலியின் தந்தை, சித்தப்பா மற்றும் உறவினர்களுக்கும் அவருக்கும் தகராறு ஏற்படவே சஞ்சய் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மேற்கு காவல் நிலையம்

இக்கொலைச் சம்பவத்தைப் பார்த்த பேருந்திற்காக காத்திருந்த சக பயணிகள் அலறியடித்து ஓடினர். இதனையடுத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட காதலியின் தந்தை குமார், சித்தப்பா மாரிமுத்து மற்றும் உறவினர் சங்கரநாராயணன் ஆகியோரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

கனகலெட்சுமியின் தந்தை குமார் போலீஸாரின் விசாரணையில், “எனது மகள் கனகலெட்சுமியும் உறவுக்கார பையனான சஞ்சய்யும் காதலித்து வந்தனர். அவர் சென்னையில் சிற்பக்கலைஞராக வேலை பார்த்து வந்தார்.

சஞ்சய்க்கு மது, கஞ்சா போன்ற பழக்கங்கள் இருந்ததால், அவனுக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை. மகளிடம் கூறியும் கேட்காமல் அவனை திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். இருவரும் தொடர்ந்து போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் கோவில்பட்டியில் உள்ள எனது தம்பி மாரிமுத்துவின் வீட்டில் சில மாதம் தங்கியிருக்கும்படி அனுப்பி வைத்தோம். ஆனால், சஞ்சய்யைத்தான் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தாள்.

தம்பி வீட்டிற்குச் சென்றும் போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில்தான், கடந்த வாரம் விடுமுறையில் வந்த சஞ்சய் கடந்த 17-ம் தேதி ஊருக்கு செல்வதாக மகளிடம் கூறியுள்ளார். ”சஞ்சய் சென்னைக்குப் போக வேண்டாம், உனக்கும் அவனுக்கும் திருமணம் செய்து வைக்கிறேன். அவனிடம் திருமணம் குறித்துப் பேச வேண்டும். அவனை கோவில்பட்டி பேருந்து நிலையத்திற்கு வரச்சொல்” என என் மகளிடம் சொன்னேன்.  

கோவில்பட்டி

அவளும் அதை நம்பி ஊருக்குச் செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தவனை நாங்கள் வரும் வரை காத்திருக்கும்படி சொன்னாள். அவனும் சரி எனச் சொன்னான். ஆட்டோவில் என் மகளுடன் பேருந்து நிலையத்திற்குச் சென்றோம். அங்கு காத்திருந்த சஞ்சய்யை தனியாக அழைத்துச் சென்றோம்.

“தம்பி.. இனிமேல் என் மகளிடம் பேசுவதை நிறுத்திக்கொள். இது கடைசி எச்சரிக்கை” என சொன்னோம். ஆனால், அவன் அதெல்லாம் நிறுத்த முடியாது எனச் சொன்னதும் எங்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே கத்தியால் கழுத்து, கை, முதுகு ஆகிய பகுதிகளில் குத்தினோம்” என விசாரணையின் போது கூறி போலீஸாரையே அதிர வைத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெறு வருகிறது. !

பஞ்சாப்: திருமணத்திற்கு மறுத்த பாடகி; கால்வாயில் சடலமாக மீட்பு; வாலிபர் மீதான வழக்கின் பின்னணி என்ன?

பஞ்சாப்பில் ஆயுத கலாசாரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கிறது. அடிக்கடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யும் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. தற்போது பஞ்சாப்பில் பெண் பாடகி ஒருவர் துப்பாக்கி முனையில்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தனியார் மருந்தகத்தில் கொத்து கொத்தாக கைப்பற்றபட்ட போதை தரும் மாத்திரைகள்; வாலிபர் கைது!

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் காவல்நிலைய டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ப... மேலும் பார்க்க

தனியார் டிவி ரிப்போர்டரை வீடு புகுந்து தாக்கிய கும்பல்; கஞ்சா போதை காரணமா? திருவாரூர் போலீஸ் விசாரணை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (38), இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரிப்போர்டராக வேலை செய்கிறார். நேற்று கோவிலூர் பகுதியில் செய்தி சேகரிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை; பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர், சென்னையில் சிலை செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். மேலும், கூலித் தொழிலுக்கும் சென்று வந்துள்ளார். இவரும், பக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஆண் குழந்தை இல்லாததால் மனைவி மீது சந்தேகம்; பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இடத்தில் வசிப்பவர் சுக்காராம். வெல்டராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி திருமணம் மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேக... மேலும் பார்க்க

கெளதம் அதானி மீதான குற்ற வழக்குகள்; கைவிட்ட அமெரிக்க அரசு; தள்ளுபடி செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?

தொழிலதிபர் கெளதம் அதானி இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக அ... மேலும் பார்க்க