செய்திகள் :

திருவள்ளூர்: கொடூரமாகத் தாக்கப்படும் வடமாநில இளைஞர்; சர்ச்சையைக் கிளப்பும் வீடியோ; வலுக்கும் கண்டனம்

post image

திருவள்ளூர் மாவட்டத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் நான்கு சிறுவர்களால் அரிவாள்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சிராஜ். இவர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த சில சிறுவர்கள் சிராஜை கத்தி போன்ற ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டுகின்றனர். ஒருகட்டத்தில் ஆயுதம் மூலம் மிரட்டி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிராஜை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

வடமாநில இளைஞரைக் கொடூரமாகத் தாக்கும் காட்சி
வடமாநில இளைஞரைக் கொடூரமாகத் தாக்கும் காட்சி

அங்கு அவரைக் கொடூரமாகத் தாக்குகின்றனர். அதை செல்போனில் வீடியோவாகவும் எடுக்கின்றனர். அந்தக் கொடூரக் காட்சியில், சிராஜ் வலி தாங்காமல் கதறும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அவரை ஆள்நடமாட்டம் இல்லாத ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் அவரைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு, அங்கேயே சிராஜை விட்டுச் செல்கிறார்கள்.

அங்கிருந்து மீட்கப்பட்ட சிராஜ் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வைரலான இந்த வீடியோவை காவல்துறை கவனத்தில் கொண்டு, சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் எனச் சமூக ஊடகங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

`இரவில் பயத்தில் வாழ்கிறோம்' - ஜூனியர் மாணவிகளை ராகிங் செய்த 19 மாணவிகள்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் அரசு ஆயுர்வேத கல்லூரியில் படிக்கும் மாணவர்களை ராகிங் செய்வதாக நிர்வாகத்திற்கு புகார் வந்தது. குறிப்பாக மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியில் இரவு நேரத்தில... மேலும் பார்க்க

மும்பை: நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி; ஆன்லைன் நீதிமன்றத்தில் விசாரித்து ரூ.3.75 கோடி பறிப்பு

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். உங்களது பெயர் பணமோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.இதில் தனக்கு தொடர்பு இல்லை எ... மேலும் பார்க்க

”வொர்க் ப்ரம் ஹோம்; ஆன்லைன் ரிவ்யூ..” விளம்பரத்தால் இளம்பெண்களிடம் ரூ.19 லட்சம் மோசடி

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் அபிநயா. இவர், கடந்த அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் வந்த “வீட்டிலிருந்த படியே வேலை” என்ற விளம்பரத்தைப் பார்த்து அதை க்ளிக் செய்துள்ளார். உடனே அவருக்கு வாட்ஸ் அப்... மேலும் பார்க்க

மும்பை: "ஆண் குழந்தை இல்லை" - 6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் சிக்கியது எப்படி?

மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் கலம்பொலி என்ற இடத்தில் வசிப்பவர் சுனந்தா(30). இவரது கணவர் சாப்ட்வேர் பொறியியலாளராக இருக்கிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.அச்சிறுமிக்கு ஆரம்பத்தில் இ... மேலும் பார்க்க

`மலையில் தஞ்சம்' - பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது

தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட கொடூர குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் வைத்து தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; வீடியோ ஆதாரத்துடன் புகார்; தலைமறைவான காவலர்

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீஸாரின் அலட்சியம் காரணமாக தற்போது அந்தக் காவலர் தலைமறைவாகி... மேலும் பார்க்க