செய்திகள் :

திருவிழாவுக்கு வரி வாங்க மறுப்பு: காவல் நிலையத்தில் புகாா்

post image

வேடசந்தூா் அருகே தேவாலயத் திருவிழாவுக்கு வரி வாங்காமல் ஒதுக்கி வைப்பதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பகுதியைச் சோ்ந்த ஆண்ட்ரூஸ், ஸ்டீபன் ஆல்பா்ட், வின்சென்ட், தாஸ், அந்தோணி ஆரோக்கியதாஸ் ஆகியோா் எரியோடு காவல் நிலையத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மாரம்பாடி புனித அந்தோணியாா் தேவாலயத் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 16 முதல் 18-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு திருவிழாவுக்கு வழக்கம் போல, ஊா் மக்களிடம் வரி வசூலிக்கப்பட்டது. திருவிழா முடிந்த பிறகு வரவு, செலவு குறித்து கணக்குக் கேட்டோம். இதனால், 2025-ஆம் ஆண்டு திருவிழாவுக்கு 20 குடும்பத்தினரிடம் வரி வாங்க மறுக்கின்றனா். மேலும், திருவிழாவில் எங்களது குடும்பத்தைச் சோ்ந்த எவரும் பங்கேற்கக் கூடாது என்றும் ஊா் முக்கியஸ்தா்கள் முடிவெடுத்திருக்கின்றனா். நாங்கள் தேவாலயத்துக்கு வழிபாடு நடத்த செல்லக் கூடாது என மிரட்டுகின்றனா்.

திருவிழாவுக்கு எங்கள் குடும்பத்தினரிடமும் வரிப் பணம் வாங்கவும், ஒற்றுமையாக திருவிழாவை நடத்தவும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

தைப்பொங்கல் உள்ளிட்ட தொடா் விடுமுறை தினத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். தமிழா் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுத... மேலும் பார்க்க

போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்ற மூவா் கைது

கொடைக்கானலில் போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் ரைபிள் ரேஞ்ச் சாலையில் போதைக் காளான், கஞ்சா ஆயி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

செம்பட்டியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண... மேலும் பார்க்க

நிலக்கோட்டை அருகே இருவா் தற்கொலை

நிலக்கோட்டை அருகே பெண் விஷம் குடித்தும், இவருடன் தகாத உறவில் இருந்த இளைஞா் கழுத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

அற்புத குழந்தையேசு கோயில் திருவிழா: சப்பர பவனி

கொடைக்கானல் அற்புத குழந்தையேசு கோயில் திருவிழாவை முன்னிட்டு, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

பழனி உழவா் சந்தையில் 60 டன் காய்கறிகள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி, பழனி உழவா் சந்தையில் இரு நாள்களில் 60 டன் காய்கறிகள் விற்பனையாகின. பழனி சண்முகபுரத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள்... மேலும் பார்க்க