செய்திகள் :

'தூத்துக்குடி போகாத எடப்பாடி பழனிசாமி விஜய்யை பற்றி பேசலாமா' - செங்கோட்டையன் பதிலடி!

post image

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சினிமாவில் இருந்து எம்ஜிஆர் 3 முறை முதலமைச்சராகியுள்ளார். ஜெயலலிதா 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என்கிற வரலாற்றை இந்தியாவிற்கே எம்ஜிஆர், என்டிஆர் உருவாக்கியுள்ளனர் . இப்போதுள்ள நிலையில் தவெக, திமுக இடையேதான் போட்டி. எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்ற நிலை இல்லை.

பிரதமரின் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை. யாரை நம்பி இவர் கட்சி நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி முகத்திற்காகவா மக்கள் ஓட்டு போடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

 விஜய்
விஜய்

அதையே அவர் இன்னும் உணராமல் இருக்கிறார். அதிமுக, திமுக நிர்வாகிகள் வீட்டிற்கு சென்றாலும், அவர்களின் குடும்பத்தினரின் வாக்கு தவெகவுக்கு செல்லும் நிலை உள்ளது. எங்களது சர்வே முடிவில் தவெகவுக்கு 40% வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தூத்துகுடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை குருவிகளை சுடுவது போன்று சுட்டு கொன்றார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமி எட்டி பார்த்தாரா. ஜெயலலிதா தங்கி இருக்கும் கோடநாடு எஸ்டேட்டில்  2 கொலைகள் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அந்த சம்பவம் காலையில்தான் எனக்கு தெரியும் என்று சொன்னவர் தான் எடப்பாடி. அவர் எப்படி முதலமைச்சரானார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதையும் நாடே அறியும். அவருக்கு விஜய்யை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை” என்றார்.

Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் |Live

27 ஆண்டுகளுக்குப் பிறகு!27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட்டாக இது உள்ளது.. இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்த ... மேலும் பார்க்க

`விசுவாசத்தின் விலை துரோகமா?' - ஜி ஜின்பிங்கின் 'நிழல்' ஜாங் யூக்ஸியா வீழ்ந்தது எப்படி?

வரலாற்றின் பக்கங்கள் எப்போதுமே அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களை போலவே, அந்த உச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டவர்களை பற்றியும் அதிகம் பேசுகின்றன. எந்த ஒரு பேரரசின் வீழ்ச்சியும் அதன் அடித்தளத்திலிருந்த... மேலும் பார்க்க

நெல்லை: `எங்களை கொல்லப் பார்க்கிறார்கள்'- அரசின் காலை உணவை குப்பையில் கொட்டிய தூய்மைப் பணியாளர்கள்!

தமிழகத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கவதற்கு சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உண... மேலும் பார்க்க

MSME: US வரியால் பெரும் பாதிப்பு; வேறு சந்தைகளை தேட 'இந்த' அறிவிப்புகள் வேண்டும்|மத்திய பட்ஜெட் 2026

இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்று - சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை. இந்தத் துறைக்கான அறிவிப்பு எதிர்பார்ப்புகள் என்ன என்பதை விளக்குகிறார் See Change நிறுவனத்தின் தலைவர... மேலும் பார்க்க

"மொழி டாக்ஸிக் ஆக மாறக்கூடாது; எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள்.!"- கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் NDTV நடத்திய தமிழ்நாடு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் நேற்று (ஜன.30) கலந்துகொண்டிருக்கிறார். இந்த கருத்தரங்கில் மொழி குறித்து பேசிய அவர், " அன்பு ஒரு ப... மேலும் பார்க்க

`அவர்களுக்கு உரிமை இருக்கிறது; சுனேத்ரா துணை முதல்வராவது பற்றி எனக்கு தெரியாது'- சரத் பவார்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தனது சொந்த ஊரான பாராமதியில் நடந்த விமான விபத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் தலைமை வகித்த தேசியவாத காங்கி... மேலும் பார்க்க