செய்திகள் :

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 நாள்களாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸார்; பின்னணி என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயியான இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள்.

இளையமகள், குறுக்குச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மகள் வீடு திரும்பாததால், காட்டுப்பகுதியில் தேடியுள்ளனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. மறுநாள் (11-ம் தேதி) காட்டுப்பகுதியின் அடர்ந்த முட்புதருக்குள் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

பொதுமக்கள் சாலைமறியல்
பொதுமக்கள் சாலைமறியல்

இதனையடுத்து இத்தகவல் காட்டுத்தீயாய் பரவ ஊர் மக்கள் வேடநத்தம் – குறுக்குச்சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ”குற்றவாளிகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என, அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் உறுதியளிக்க சாலைமறியலைக் கைவிட்டனர்.

ஆனால், வேடநத்தம் கிராமத்திற்குள் உயிரிழந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள், ஊர்ப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, அம்மாணவியின் வீட்டிற்கு ஆறுதல் கூறச் சென்றார்.

அப்போது அவரை முற்றுகையிட்ட மக்கள், ”நேற்று ஏன் வரவில்லை. இரண்டு நாட்கள் கழித்து வருகிறீர்கள்” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்கள்.

பின்னர், ஊர்த்தலைவர்கள் கனிமொழியைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று குடும்பத்தினரைச் சந்திக்க வைத்தனர். நடந்தது குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

சாலைமறியல்

அத்துடன், “மாணவியின் சகோதரி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் படிப்பினை நிறைவு செய்த பின் அவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இழப்பீடு வழங்கவும் அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்” எனக் கூறினார்.  

தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் மாணவியின் வீட்டிற்கு வந்தார். அவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பிரேதப் பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும், குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் என, மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போலீஸாரிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

மாணவி உடல் கண்டெடுக்கப்பட்ட அன்றே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே 14 பேர் விசாரணை செய்யப்பட்ட நிலையில், வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 2 பேரைப் பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்
சாலை மறியல்

இதற்கிடையில், வேடநத்தம் தவிர மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு குளத்தூர், விளாத்திகுளம், ஆறுமுகநேரி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் பொது மக்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த பகுதியில் சி.சி.டி.வி கேமரா இல்லாததாலும், பல்வேறு காரணங்கள் கூறப்படுவதாலும் சம்பவம் நடந்து 5 நாட்களாகியும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், போலீஸார் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

புதுச்சேரி: திருமணத்தை மறுத்த காதலி; பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர காதலன்! - அதிர வைக்கும் பின்னணி

புதுச்சேரி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் காவ்யா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), அண்ணா சாலையிலுள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரும், இந்திரா நகரைச் சேர்ந்த ஓட்டுநர் ஜோசப் என்பவரும் ஒருவரைய... மேலும் பார்க்க

மண்டபத்தில் கைதான கேங்க்ஸ்டர்; `திருமணம் முடியும்வரை விடுங்கள்' - போலீஸாரிடம் கதறி அழுத மணமகள்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஆகாஷ் என்பவருக்கு திருமணம் முடிவாகி இருந்தது. இதற்காக திருமண மண்டபத்திற்கு உறவினர்கள் வந்து குவிந்து இருந்தனர். மணமகன் மணக்கோலத்தில் இருந்தார். அந்நேரம் திடீரென போலீஸ் வ... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டதில் எட்டாம் வகுப்பு மாணவன் பலி - துறையூர் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்ல வண்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். விவசாயியான இவரது மகன் செல்வம் (வயது:13). இவர், கரட்டாம்பட்டியில் உள்ள அரசு மேல்நி... மேலும் பார்க்க

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு; ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலைசெய்ய முயன்றதாகக் கூறி, மான... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனையில் டாக்டர்போல நடித்து தங்க நகைகள், செல்போன் திருட்டு - கூட்டாளிகள் கைது!

சென்னை, கொளத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவரின் மாமியாருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் மாமியாரை அழைத்துக் கொண்டு காஞ்சனா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தார். காஞ்சனாவின் ம... மேலும் பார்க்க

நெல்லை: `மனைவி மீது சந்தேகம்' - தலையைத் துண்டித்து சாலையில் வைத்த கொடூர கணவன்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பட்டன். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி சுதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதாவின் நடத்தையில் முத்துப்... மேலும் பார்க்க