செய்திகள் :

தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை: ”உங்க மகளின் ஞாபகம் வரலயா?" - நீதிபதியிடம் குற்றவாளி கண்ணீர்

post image

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி, கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி மாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றார். இரவு வரை வீடு திரும்பவில்லை.

மறுநாள் 13-ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் அதே காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் ராமநாதபுரத்தைச் சார்ந்த தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று (25-ம் தேதி) அவருக்குத் தீர்ப்பளிக்கப்பட்டது. பிரிவு 104 பி.என்.எஸ் சட்டத்தின்படி தூக்கு தண்டனையும், பிரிவு 127(2) பி.என்.எஸ் சட்டத்தின்படி ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கி தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தா தீர்ப்பளித்தார்.

தர்ம முனீஸ்வரன்
தர்ம முனீஸ்வரன்

தீர்ப்பு வழங்கும் முன்பு தர்ம முனீஸ்வரனிடம் நீதிபதி, “உங்களைச் சார்ந்து உங்கள் குடும்பத்தில் யாரும் உண்டா?” என்று கேட்டார். அதன் பின்னர், "உங்களுடன் உங்களின் தாயார் மட்டுமே உள்ளார். உங்கள் மனைவியும், 17 வயது மகளும் உங்களை விட்டு பிரிந்து சென்று விட்டனர். ஏற்கெனவே ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அப்பீலில் வெளியே வந்துள்ள நிலையில், நீங்கள் செய்துள்ள இந்தச் சம்பவம் கொடூரமானது.

மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை முழுமையாகப் படித்தபோதுதான் நீங்கள் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டீர்கள் என்பது தெரிய வந்தது. உங்கள் மகள் போன்ற மகளின் வயதுடைய ஒரு குழந்தையிடம் இதுபோன்று கொடூரமாக நடந்து கொண்ட போது உங்கள் மகளின் ஞாபகம் உங்களுக்கு வரவில்லையா?

அந்தக் குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என உங்களுக்குத் தோன்றவில்லையா? இந்தக் கொடூர செயலுக்கு உங்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் அது சரியாக இருக்காது.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட தர்ம முனிஸ்வரன்
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட தர்ம முனிஸ்வரன்

அரசு தரப்பில் உங்கள் குற்றத்திற்கேற்ப பெரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டுள்ளது. இருப்பினும் மரண தண்டனையைக் குறைப்பதற்கு உங்கள் தரப்பில் ஏதும் காரணம் இருக்குமா என ஆராய்ந்த போது எங்களுக்கு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை. உங்களுக்கு வழங்கப்படும் இந்தத் தண்டனை பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு ஒரு பாடமாக அமையும்” என்றார்.           

அட்டப்பாடி மது கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை; கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி இளைஞர் மது(30) 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஒரு கும்பல் தாக்கியதில் மரணமடைந்தார். பசிக்கு கடைகளில் இருந்து உணவுபொருட்கள்... மேலும் பார்க்க

`நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ!’ - மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு `முடித்த’ கணவன்

புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான வழுதாவூரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல், அந்த ஊர் கோயிலுக்கு அருகில் கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள் கண்டமங்கலம் போலீ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி : தோட்டத்திற்குச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; உடற்கல்வி ஆசிரியர் கைது!

தோட்டத்திற்கு சென்ற பெண்ணை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் வன்கொடுமைசமீபகாலமாக தமிழகத்தின் பல பகுதிகள... மேலும் பார்க்க

விழுப்புரம்: 11 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; 62 வயது முதியவர் சிக்கிய பின்னணி என்ன?

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையொட்டி இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். 62 வயதாகும் இவர் மர வேலைகளைச் செய்து வருகிறார். நேற்று முன் தினம் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வ... மேலும் பார்க்க

மதுரை: மீனாட்சியம்மன் கோவில் அருகே சிறுவன் படுகொலை; ஒரு மாதம் காத்திருந்து வெட்டி கொன்ற கும்பல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்ற... மேலும் பார்க்க

பழனி: புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு ஆபாச மெசெஜ்; எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப்பணியாற்றி வந்தவர் ராஜகோபால். இவரிடம் சில நாள்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்னை குறித்துப் புகார் அளிப்பதற்காக காவல் நிலை... மேலும் பார்க்க