செய்திகள் :

தெருநாய்களைப் பிடித்துச்சென்று ரத்தத்தை உறிஞ்சி விற்பனை; கால்நடை மருத்துவர் மீது பகீர் புகார்

post image

பொதுமக்கள் நாய்கள் உட்பட வளர்ப்புப் பிராணிகள் மீது அதிக அன்பு மற்றும் பாசம் வைத்திருப்பார்கள். வளர்ப்புப் பிராணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ அதன் உரிமையாளர்கள் பெரிய அளவில் மனவேதனைக்கு ஆளாவார்கள்.

வளர்ப்புப் பிராணிகளின் சிகிச்சைக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா நாய்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். ஒருமுறை தனது நாயின் கால் உடைந்துவிட்டது என்பதற்காக அதனை அமெரிக்காவிற்குக் கொண்டு சென்று ஆப்ரேசன் செய்து கொண்டு வந்தார்.

அதன் பிறகு ரத்தன் டாடா வளர்ப்புப் பிராணிகளுக்காகவே மும்பையில் தனி மருத்துவமனையும் கட்டி இருக்கிறார். ஆனால் ஐதராபாத்தில் தெருநாய்களைப் பிடித்து சென்று அதன் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து அதனை பணமாக்கி வருகிறது ஒரு கும்பல்.

தெருநாய்கள்
தெருநாய்கள்

அங்குள்ள ஷேக்பெட் என்ற இடத்தில் செயல்படும் வளர்ப்புப் பிராணிகள் மருத்துவமனனையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் தெருநாய்களைப் பிடித்துச்சென்று அடைத்து வைத்து ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார்கள் தந்துள்ளனர்.

ஐதராபாத் முழுவதும் இருந்து பிடித்து செல்லப்படும் இந்தத் தெருநாய்களுக்குச் சரியான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி கூட கொடுக்காமல் அடைத்து வைத்து அடிக்கடி ரத்தம் எடுத்து அதனைத் தேவைப்படும் வளர்ப்புப் பிராணி உரிமையாளர்களுக்கு ரூ.18000 முதல் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதோடு அந்த மருத்துவமனையில் அனுமதி பெறாத விலங்குகள் ரத்த வங்கி செயல்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கால்நடைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். ஆனால் கால்நடைத்துறை இன்னும் இது குறித்து விசாரிக்க தொடங்கவில்லை என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே தெருநாய்களுக்கு பொது இடத்தில் உணவு வழங்குவது தொடர்பான பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றது.

பிஞ்சு உயிரைக் கொன்ற வன்கொடுமை: `மறைக்க முயன்ற அதிகாரிகள்; தூங்கும் காவல்துறை' - பியூஷ் மனுஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த டிசம்பர் 11, 2026 அன்று இரண்டரை வயது பட்டியலினக் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச்... மேலும் பார்க்க

Meghalaya Honeymoon Murder: கணவனைக் கொன்ற மனைவிக்கு ஜாமீன்; 11 மாதங்களுக்குப் பிறகு வெளியே வருகிறார்

கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்சி என்ற பெண் திருமணமானவுடன் தனது கணவர் ராஜா ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார். அவர்கள் மே 11ம்தேதி திருமணம் செய்த பிறகு 20ம... மேலும் பார்க்க

நங்கநல்லூர்: கதவில் ரத்தக்கறை; கொடூரமாக கொல்லப்பட்ட பெண் தொழிலதிபர் - தூக்கில் தொங்கிய கணவர்!

சென்னை நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நாகலட்சுமி (42). இவரின் கணவர் சுப்பிரமணியன். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நாகலட்சுமி, ... மேலும் பார்க்க

சிறையில் இருந்தபடி, குடும்பத்தினரைக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய `குண்டாஸ்’ கைதி - மனைவியும் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவரின் மகன்கள் முபாரக் (வயது 30), அமீர் உசேன் (23). இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைச் செய்த வழக்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; இடம் மாறி படுத்திருந்த தொழிலாளர் கொலை செய்யப்பட்ட கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் குமார். சுகாதாரத்துறை ஊழியரான இவர், அய்யனடைப்பு பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் சட்ட விரோத மதுக்கடை; அடித்து நொறுக்கிய பெண்கள்; ஓட்டம் பிடித்த உரிமையாளர்

தங்கள் கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோத மது விற்பனைக்கடைகளை கிராமப் பெண்கள் ஒன்றுகூடி அடித்து உடைத்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மது வியாபாரி தப்பித்து ஓட்டம்தமிழகத்தில் ... மேலும் பார்க்க