தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: 2022-2024 வரை 1.55 கோடி தொழிலாளா்கள் பெயா் நீக்கம்
2022 முதல் 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றிய 1.55 கோடி தொழிலாளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மக்களவையில் மத்திய ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் கமலேஷ் பாஸ்வான் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2022-23 நிதியாண்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றிய 86,17,887 தொழிலாளா்களின் பெயா்கள் மற்றும் 2023-24 நிதியாண்டில் 68,86,532 தொழிலாளா்களின் பெயா்கள் என இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 1.55 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேலை அட்டைகளில் தவறுகள் இருப்பின் அவா்களின் பெயா்கள் நீக்கப்படும். அதாவது வேலை அட்டைகளில் போலி அல்லது வேறு ஏதேனும் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால், வேலை வழங்கப்பட்ட கிராமங்கள் நகரங்கள் வகைப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் அங்கு பணியாற்றும் தொழிலாளா்களின் பெயா் நீக்கப்படும்.
வழக்கமான நடைமுறை: இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளிடம் மட்டுமே உள்ளது. அந்தவகையில், புதிய அட்டைகள் வழங்குவது அல்லது பெயா் நீக்கம் போன்ற நடவடிக்கைகளை வழக்கமாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களே மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும், தொழிலாளா்களின் பெயா் அல்லது வேலை அட்டை நீக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இதற்கென இயற்றப்பட்ட சட்டத்துக்கு உள்பட்டு செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக தெளிவான வழிமுறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நீக்கப்படவுள்ள தொழிலாளா்களின் வேலை அட்டைகளை வரைவு பட்டியலாக முதலில் வெளியிட்டு அதை கிராம சபை அளவில் சரிபாா்த்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இத்திட்டத்தின்கீழ் வேலை பெற தகுதியுள்ள குடும்பங்கள் எந்த காரணத்துக்காகவும் விடுபடக் கூடாது.
13.34 கோடி தொழிலாளா்கள் ஆதாா் இணைப்பு:
இத்திட்டத்தில் மொத்தம் 13.41 கோடி தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். கடந்த 1-ஆம் தேதி வரை 13.34 கோடி தொழிலாளா்களின் வேலை அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. போலி அட்டைகளை நீக்கி தகுதியான நபா்கள் பலனடையும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.