செய்திகள் :

தேர்தல் அறிக்கை: `கவர்ச்சிகர திட்டங்கள் இல்லை; முன்னேற்ற திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை'- கனிமொழி

post image

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வரும் 29-ஆம் தேதி மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளரும், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான எம்.பி. கனிமொழி இன்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "மகளிர் அணி மாநாட்டில் 1 லட்சம் முதல் 2 லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். பெண்கள் பாதுகாப்பாக சிரமமின்றி கலந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். தமிழகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்புடன் உள்ளதால், இந்த மாநாட்டுக்கென தனிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை இல்லை. எனினும் மற்ற கட்சிகளுக்கு கொடுக்கும் நிபந்தனைகள் எங்களுக்கும் பொருந்தும்.

கனிமொழி

காவல் துறை விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் முறையாகப் பின்பற்றி மாநாடு சிறப்பாக நடைபெறும். எந்த வளர்ச்சியும் இல்லாத மாநிலமாகவும், கடன் மாநிலமாகவும் கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலினின் அயராத உழைப்பால் இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. உண்மை என்ன என குற்றஞ்சாட்டுபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.‌ தேர்தலுக்காக அவர்கள் பேசி வருகிறார்கள். 2026 திமுக-வின் தேர்தல் அறிக்கையில் கவர்சிகர திட்டங்களை எதிர்பார்க்க முடியாது. முன்னேற்றத்துக்கான திட்டங்களைத்தான் வாக்குறுதிகளாக வழங்குவோம். மற்ற கட்சியினர்தான் கறுப்புக் கொடிக்கு அஞ்சுவார்கள். நாங்கள் கறுப்பில் இருந்து வந்தவர்கள். எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது" என்றார்.

விபி-ஜி ராம் ஜி: "உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே பழனிசாமி.!" - ஸ்டாலின்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய பாஜக அரசு, வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு (விபி -ஜி ராம் ஜி) சட்ட மசோதாவாக மாற்றி நாடாளுமன்றத்தில் த... மேலும் பார்க்க

"எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோஅம்!" - கூட்டணி குறித்து பியூஸ் கோயல்

மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று (டிச.23) தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக முதற்கட்ட ஆலோசனையை மேற்கொள்ள சென்னை வந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த போராட்டம் - இம்முறை இந்தியா பக்கம் திரும்புவது ஏன்?

2024-ம் ஆண்டு, ஜூலை மாதம் வங்கதேசமே கலவரப்பூமியாக இருந்தது. இட ஒதுக்கீடு, ஊழல், கொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வங்கதேசத்தின் இளைஞர்கள் பட்டாளம் அப்போதைய வங்கதேச அரசை எதிர்த்துப் போராடியது.... மேலும் பார்க்க

TVK: அமைச்சர் சம்பந்திக்கு வாய்ப்பு? பட்ட அவமானம்தான் காரணமா? - அஜிதாவுக்கு மறுக்கப்படுவது ஏன்?

கட்சி தொடங்கி, இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. அதற்குள் மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார், பதவி நீக்கம், கட்சி அலுவலகத்தையே முற்றுகையிடும் தொண்டர்கள் என தவெக சம்பவங்கள் தொடர்கதையாகி வருக... மேலும் பார்க்க

இந்தியா, நியூசிலாந்து இடையே முடிவான ஒப்பந்தம்; எந்தெந்த துறைக்கு லாபம்? உள்ள ஒரே ஒரு சிக்கல் என்ன?

'இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நேற்று முடிவாகி உள்ளது' - இது தான் இன்று எந்தப் பக்கம் திரும்பினாலும், அதிகம் பேசப்படும் ஒன்று. இந்தியா - நியூசிலாந்து பேச்சுவார்த்தை இந்தியா, ... மேலும் பார்க்க

TVK : 'காரை மறித்த பெண் நிர்வாகி; நிற்காமல் சென்ற விஜய்! - என்ன நடந்தது?

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய்யின் காரை பெண் நிர்வாகி ஒருவர் மறிக்க, நிற்காமல் விஜய்யின் கார் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Ajithaதவெக சார்பில் ஏற்கெனவே 120 ... மேலும் பார்க்க