செய்திகள் :

'தோத்தாலும் பெருமையா இருக்கு சார்...' - குஜராத் கேப்டன் சுப்மன் கில்

post image

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.

கில்
கில்

தோல்விக்கு பிறகு பேசிய குஜராத் கேப்டன் கில், '180–190 ரன்கள் எடுத்திருந்தால் போட்டி இன்னும் சவாலாக இருந்திருக்கும். ஆரம்பத்தில் மைதானம் சற்று மெதுவாக இருந்தது,முதல் சில ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது.நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியின் நடுவில் வேகத்தை இழந்தோம். இருந்தாலும் 150–160 ரன்கள் எடுத்தாலும் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் எடுத்தால் போட்டிக்குள் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் பவர்பிளேயில் எதிரணி கொஞ்சம் அதிக ரன்கள் எடுத்துவிட்டது.

இந்த சீசனில் எங்கள் அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. முதல் சில போட்டிகளில் தோற்ற பிறகும் நாங்கள் மீண்டு வந்து தொடர்ந்து முன்னேறினோம்.

GT
GT

ஒவ்வொரு நாளும் எங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சித்தோம். சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தி அணியாக வளர்ந்தோம். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தாலும், இந்த சீசனில் அணியின் செயல்பாட்டில் நான் பெருமைப்படுகிறேன். இன்னும் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. இந்த அனுபவம் அடுத்த சீசனில் எங்களை இன்னும் வலிமையான அணியாக மாற்றும்' என்றார்.

'நான் விக்கெட் எடுக்கலன்னாஹேசல்வுட் எடுப்பார்... அவர் எடுக்கலன்னா...' - ரகசியம் கூறும் RCB பௌலர்கள்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.கோலிஆர்.சி.பியின் வெற்றிக்கு உதவிய சீனியர் பௌலர்களான பு... மேலும் பார்க்க

'நான் அவுட் ஆகியிருந்தாலும் இந்த டீம் பந்தயம் அடிச்சிருக்கும்!' - விராட் கோலி பெருமிதம்!

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி. கோலிஆட்டநாயகன் விருதை வென்ற கோலி பேசுகையில், 'நான் இப்... மேலும் பார்க்க

வேட்டையாடிய விராட் கோலி; இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதித்த ஆர்.சி.பி!

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்திருக்கிறது பெங்களூரு அணி. ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டுமே தொட... மேலும் பார்க்க

'சொந்த மைதானத்தில் ஆர்.சி.பியை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி!' - இறுதிப்போட்டி குறித்து கில்

ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக குஜராத் அணி இறுதி போட்டியை எட்டியுள்ளது. நாளை (மே31)அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.நேற்று நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

RR: கேப்டன் பராக் பேச்சால் சலசலப்பு? 'அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!' - சங்கக்காரா தடாலடி

ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 2 வரை முன்னேறி அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், கேப்டன் ரியான் பராக் பேசிய கருத்து ஒன்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. "நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்கு வருவோம் என எதிர்பார்க்கப்... மேலும் பார்க்க

'சூர்யவன்ஷி ஒரு நாள் எங்களுக்காக கோப்பையை ஜெயிச்சு கொடுப்பான்!' - ரியான் பராக் நம்பிக்கை

ஐபிஎல் 2026-ன் நேற்றைய(மே 29) குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில... மேலும் பார்க்க